வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மரம் வளர்ப்போம் கட்டுரை | Maram Valarpom in Tamil Katturai

Updated On: March 25, 2025 5:28 PM
Follow Us:
maram valarpom in tamil katturai
---Advertisement---
Advertisement

 Maram Valarpom in Tamil Katturai

மனிதர்களின் வாழ்வாதரத்திற்கு பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, வெப்பம், ஆகாயம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று மரங்களும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நாம் சுவாசிப்பதற்கு தேவையான காற்று மரங்களிடமிருந்தும், செடிகளிடமிருந்தும் தான் கிடைக்கிறது. “வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்” என்ற பாடலுக்கேற்ற அந்த அளவிற்கு மரங்கள் மனிதருக்கு பல வகையிலும் பயன்பட்டு கொண்டிருக்கிறது. மரத்தின் நன்மைகளை நாம் இந்த பதிவில் கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

 Maram Valarpom in Tamil Katturai

குறிப்பு சட்டகம்

முன்னுரை
புவி வெப்பமயமாதலை தடுக்க
மரங்களின் முக்கியத்துவம்
மரம் வளர்ப்பதால் வரும் நன்மைகள்
மரங்கள் அழிக்கப்படுவதால் வரும் தீமைகள்
முடிவுரை

 

maram valarpom katturai

முன்னுரை:

  • மாறி வரும் பருவ நிலைக்கு மிக முக்கியமான காரணம் மரங்களை மனிதர்கள் அழிப்பது தான். இப்பொழுது அனைத்து சுவரோட்டிகளிலும் மரம் நடுவோம், மழை பெறுவோம் போன்ற வாசகம் தான் இருக்கின்றன. அதற்கு காரணம் பூமி வெப்பமடைய தொடங்கி மனிதனின் வாழ்க்கையை அழித்துவிடும் என்ற காரணத்தினால் தான்.
  • மரங்கள் இல்லை என்றால் பூமி மிகவும் வெப்பம் அடைந்து மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்காது. மரம் இல்லை என்றால் மழை பொழியாது நீர் இருக்காது, மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிப்பார்கள்.

புவி வெப்பமயமாதலை தடுக்க:

  • புவியின் வெப்ப நிலையை குறைக்க மரங்களை நடுவது மிகவும் அத்தியாவசியமானது. இப்பொழுது இருக்கும் நிலையே தொடர்ந்தால் நம் நாடு இன்னும் பத்து வருடங்களில் பாலை வனமாகிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த நிலையை போக்குவதற்காக தான் தமிழ்நாடு அரசு, தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பல கல்வி நிறுவனங்கள் மரங்கள் நடுவதையும், மரம் நடுவதால் வரும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.

மரங்களின் முக்கியத்துவம்:

  • மரம் வளர்த்தால் தான் மழையை பெற முடியும், மழை பொழிந்தால் தான் நாம் உயிர் வாழ்வதற்கு முக்கியமான குடிநீரை பெற முடியும். இப்பொழுது மழை பொழியாததால் தான் இலவசமாக கிடைக்க வேண்டிய குடிநீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
  • மரங்கள் பூமியின் பசுமைச் சேலை. அவை மழை பெய்யும் அளவை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், நிலச்சரிவை தடுக்கவும் மரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
  • மரங்கள் காணாமல் போனால், மனிதர்கள் மூச்சு விட முடியாது என்பதே உண்மை. அவை கார்பன் டையாக்ஸைடைக் குடித்து, ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன. இதன் மூலம் நாம் சுத்தமான காற்றைப் பெறுகிறோம்.
  • மரங்கள் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றன. அது மட்டும் அல்லாமல், அவை காலநிலையை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகின்றன.
  • மரங்கள் மண் இழப்பை (erosion) தடுக்க உதவுகின்றன. அவற்றின் வேர்கள் மண்ணைப் பற்றிப் பிடித்து, நிலச்சரிவை தடுக்கின்றன.

மரம் வளர்ப்பதால் வரும் நன்மைகள்:

  • மரம் வளர்ப்பதால் நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. பூமியை வெப்பத்திலிருந்து காத்து குளிர்விக்கப் பயன்படுகிறது, பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாக, இயற்கை உரமாக, நாம் உண்பதற்கு உதவும் காய், கனி, கீரை போன்றவற்றை தருகின்றன. மண்ணுக்கு பசும் போர்வையாக இருக்கின்றன.
  • பல நோய்களுக்கு மருந்தாக, வீடு கட்டுவதற்கு, மேசை, நாற்காலி போன்றவைகள் செய்வதற்கு, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதற்கு, மாசு இல்லா காற்றை வழங்குவதற்கு, நிலச்சரிவை தடுப்பதற்கு, மன அழுத்தம் உள்ள பல மனிதர்களுக்கு மன அமைதியை கொடுக்கிறது, மனிதன் இழைப்பாற நிழலை கொடுக்கிறது.
  • காடுகள் என்பது மரங்கள் மட்டுமல்ல. அதில் வளர கூடிய செடிகள், கொடிகள், புல், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை சார்ந்தது.
  • மரங்கள் கார்பன் டையாக்ஸைடைப் (CO2) புகுத்தி, ஆக்ஸிஜனை (O2) வெளியேற்றுகின்றன. இதனால், நாம் தூய்மையான காற்றைப் பெற முடிகிறது.
  • மரம் அதிகரித்தால் மழை அதிகம் பெய்யும். இது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உதவுகிறது. மேலும், உஷ்ணம் குறைந்து, கடும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • மரத்தின் வேர்கள் மண்ணைப் பற்றிப் பிடித்து நிலச்சரிவைத் தடுக்கும். மண் அரிப்பு (soil erosion) ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • மரங்கள் காற்றில் உள்ள நச்சுத்தன்மை வாயுவை உறிஞ்சி, மாசு கட்டுப்பாட்டில் உதவுகின்றன. இதனால் சூழல் சுத்தமாகவும் ஆரோக்யமாகவும் இருக்கும்.
  • மரங்களில் இருந்து பல்வேறு பழங்கள், காய்கள், இலைகள் கிடைக்கின்றன. அவை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன.
    உதாரணம்: வேப்பமரம், நெல்லிக்காய் மரம், கோவா மரம் போன்றவை மருத்துவப் பயனுள்ளவை.
  • மரங்கள் பல்வேறு உயிரினங்களுக்கான இருப்பிடமாகவும் செயற்படுகின்றன. பறவைகள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவை மரங்களில் வாழ்கின்றன.
  • மரங்கள் இருக்கும் இடம் அழகாகவும் அமைதியாகவும் காணப்படும். இது மனச்சோர்வை குறைக்கும். மரங்கள் அதிகம் வளர்ந்திருக்கும் இடங்களில் இயற்கை அழகு உலா விடும்.
  • மரம் வளர்ப்பது வெப்பநிலையை குறைக்கும். வெயில் கொளுத்தும் நாட்களில் மர நிழலில் நின்றால் குளிர்ச்சி கிடைக்கும்.
மழைநீர் சேகரிப்பு கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

மரங்கள் அழிக்கப்படுவதால் வரும் தீமைகள்:

  • மரங்கள் அழிக்கப்படுவதால் தான் இயற்கை சீற்றங்களான சுனாமி, நில நடுக்கம், மண் அரிப்பு, புயல், வெள்ளம், வறட்சி, புவி வெப்பமயமாதல் போன்றவை உருவாகிறது. இது போன்ற இயற்கை சீற்றங்கள் உருவாவதற்கு வேறு யாரும் காரணம் அல்ல மனிதர்களாகிய நாம் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
  • மரங்கள் கார்பன் டையாக்ஸைடை உறிஞ்சி, ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன. மரங்கள் அழிக்கப்படும்போது காற்று மாசுபட்டு, கார்பன் அளவு அதிகரிக்கிறது. இது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • மரங்கள் வெட்டப்படுவதால் மழை அளவு குறைகிறது. மழைப்பொழிவு குறைவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, வறட்சி ஏற்படுகிறது.
  • மரம் வெட்டப்படுவதால், கார்பன் டையாக்ஸைட் அளவு அதிகரித்து, பூமியின் வெப்பநிலை உயரும். இது பனிப்பாறைகள் உருகுவதற்கும், கடல் மட்டம் உயர்வதற்கும் காரணமாகிறது.
  • மரங்கள் மண்ணைப் பற்றிப் பிடித்து நிலச்சரிவைத் தடுக்கும். மரங்கள் அழிக்கப்படும்போது மண் அரிப்பு (Soil Erosion) அதிகமாகி, நிலச்சரிவு ஏற்படுகிறது.
  • மரங்கள் வெட்டப்படுவதால், பல விலங்குகள் மற்றும் பறவைகள் தங்களது இருப்பிடங்களை இழக்கின்றன. இதன் விளைவாக பல உயிரினங்கள் அழிவுபடும்.
  • மரங்கள் அழிக்கப்படுவதால் காற்றில் உள்ள தூசு மற்றும் நச்சு வாயுக்கள் அதிகரிக்கின்றன. இது மனிதர்களின் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.
  • மரங்கள் மழையை ஈர்ப்பதற்கும், நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கும் முக்கியமானவை. அவை அழிக்கப்பட்டால் நிலம் வறண்டு, நீர் பற்றாக்குறை ஏற்படும்.
  • மரங்கள் வெட்டப்படுவதால் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. புயல், வெள்ளம், கடும் வெப்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கின்றன.
இயற்கை வளம் கட்டுரை

முடிவுரை:

  • நாம் மரங்களுக்கு எவ்வளவு தீமை செய்தாலும் மரங்கள் ஒரு போதும் நமக்கு தீமை செய்வதில்லை. மரங்களை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை அதை நாம் அழிக்காமல் இருந்தாலே போதுமானது.
  • மரங்களின் வளங்களை பாதுகாத்து நம் எதிர்கால சந்ததியினருக்கு நல்வழி காப்போமாக. ஆளுக்கொரு மரம் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! பசுமையான உலகை படைப்போம்!

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now