வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மகளிர் தின பாடல்கள் | Women’s Day Songs Tamil

Updated On: March 4, 2026 5:25 PM
Follow Us:
Women's Day Songs Tamil
---Advertisement---
Advertisement

மகளிர் தின சிறப்பு பாடல்கள் | Women’s Day Special Song in Tamil

பெண் என்றாலே அனைத்திலும் சிறப்பு வாய்ந்தவள் தான். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்து வென்ற நாள் தான் இந்த மகளிர் தினம். மகளிர் தினத்தை பெண்கள் மட்டும் கொண்டாடாமல் ஆண்களும் பெண்களுக்கு நிகராக பங்கெடுத்து அந்த நாளினை கொண்டாட வேண்டும். பெண்களுக்கு ஆண்களை விட எப்போதும் மனதில் வலிமை அதிகமாக இருக்கும். இதனால் தான் பெண்கள் எந்த கஷ்டத்தினையும் கடந்து வாழ்வில் வெற்றி அடைவார்கள். மகளிர் தினத்தை போற்றும் விதமாக பெண்களுக்கென ஒரு மகளிர் தின சிறப்பு பாடலை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

மகளிர் தினம் பேச்சு போட்டி கட்டுரை

மகளிர் தினம் பாடல்கள்:

பெண்மை போற்றிடுவோம் ….மாதர் மாண்பினையே காப்போம்..!
தாய்மையை வணங்குவோம்….பெருமிதம் கொள்வோம்…
பாரதம் செழிக்க…பெண்கள் சிறக்க…

மகளிர் தினத்தில்… மகிழ்ச்சியில் திளைப்போம்…
சிந்தித்து செயல்பட்டு …சிகரத்தை அடைவோம்..!

வீட்டின் கண்கள்… நாட்டின் இதயமே…
பெண்கள் நினைத்தால்..அனைத்திலும் ஜெயமே…!
—-பெண்மை

மழலைச்செல்வம்… மகிழ்ச்சியாய் வளர….
உறக்கத்தை மறந்த…மெழுகு தீபங்கள்…

உதிரம் அளித்து… உயிரை வளர்த்த…
தியாகத்தை எண்ணி…. பாதம் பணிவோம்…
—-பெண்மை

ஈடில்லா இறைவனின்…. வடிவமே தாய்தான்..
கனிவுடன் பழகும் …ஆளுமை திறத்தால்…

உணவும் படைத்து… பிணிதனை அகற்றும் ..
பெண்ணவள் நாளும்…அமைதியின் அம்சம்..!
—-பெண்மை

இல்லத்தின் அரசி ….எண்ணத்தில் வலிமை..
வையகம் வாழ்த்தும் ..பெண்மையின் மென்மை…

குடும்பம் என்னும்… தேரை நகர்த்தும்..
வடமாய் விளங்கும்… ஆற்றலும் பெண்ணே…
—-பெண்மை

அழகுப்பதுமைகள்….அறிவின் சிகரங்கள்…
படிப்பில் சுட்டி…விளையாட்டிலும் கெட்டி…

கல்வி வேலை …அனைத்திலும் ஏற்றம்…
மங்கையின் இலக்கு….புவியல்ல வானம்….
—-பெண்மை

தமிழன்னை தாய்மொழி …எதிலும் நிறைந்த …
பூமியன்னையாய் …..பொறுமை காப்போம்…

வீரம் பழகுவோம் …விவேகமும் கற்போம் ..
தனித்திறன் வளர்ப்போம் …தரணியை ஆள்வோம்…
—-பெண்மை

சேவையின் சிகரம் …அன்னை தெரசா…
அமைதிக்கு நோபலும் … பெற்ற மலால …

விண்ணில் பறந்த….கல்பனா சாவ்லா …
மகுடம் சூடிய ……ஐஸ்வர்யா ராய்..
—-பெண்மை
தன்னிகரற்ற…. நாட்டை அமைக்க …
சிந்தனை திறத்தால் …பாதை அமைப்போம் …

உடலை பேணிடு….உறுதியைக்காத்திடு…
திடமான மனதுடன்…தீர்க்கமாய் முடிவெடு …
—-பெண்மை

பெண்ணே ஷக்தி…பெண்ணே இயக்கம்..
பெண்ணே அனைத்தும் …உணர்ந்திடு தோழி…

விழித்தெழு இன்றே .. வீறுகொள் நன்றே ..
புறப்படு நீயும்….வெற்றியும் உனதே…!
—-பெண்மை

Women’s Day Songs in Tamil Lyrics:

அன்பென்னும் ஊஞ்சலில் அழகாக அசைந்திடும்
ஆனந்தப் பெண்மை அழகே!

அதிகாரம் ஆணவம் அனைத்தும் கடந்து
அரவணைக்கும் அன்னை நீயே!

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!
அன்னப் பறவையாய் நல்லதை கைக்கொண்டு
அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!

மன்னவன் மாலையே மாதர்கள் அரசியே
மகிழ்வோடு என்றுமிருப்பாய்!

ஆழி நீ சூழி நீ ஆர்ப்பரிக்கும் ஆர்வம் நீ
அகலாத அன்பின் தேவி!

சொல்லும் நீ செயலும் நீ எண்ணம் நீ வண்ணம் நீ
நல்லதனைத்தும் நீயே!

குழந்தைக்கு குழந்தை நீ தேவாதி தேவி நீ
உலகெல்லாம் ஆளும் சக்தி!

உண்மையே மென்மையே ஒளிர்கின்ற பாசமே
உலகத்தின் உயிர்ச்சக்தியே.!

காந்தம் நீ கருணை நீ எரிமலை நெருப்பும் நீ
பனி உருவச் சிற்பம் நீயே!

புதுயுகப் புயலும் நீ பொதிகையின் கயலும் நீ
புவியாள வந்த அழகே!

பெண்மையை போற்றும் பாடல்கள்:

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்

உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே

‘போற்றி தாய்’ என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே

போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
‘போற்றி தாய்’என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே

அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்

மகளிர் தின ஸ்பெஷல்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now