பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal
Bharathiyar Kavithaigal:- மகாகவி பாரதியார் ஒரு தமிழ் கவிஞர் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்தியாவின் சுதந்தர போராட்ட காலங்களில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வுகளை நுழைந்தவர். மேலும் மகாகவி பாரதி ஒரு நல்ல கவிஞர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் உணர்த்தியவர். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பல கவிதை எழுதிய நம் பாரதியார் அதே போல் தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கத்தியவர் மகாகவி பாரதியார் தான். சரி இப்பதிவில் இப்புகழ்பெற்ற மனிதன் எழுதிய கவிதைகளை காண்போம் வாங்க.
Bharathiyar Quotes Tamil:-
பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal in Tamil | Bharathiyar Poems
பாமாலை : பக்தி பாடல்கள்
வேதாந்தப் பாடல்கள்
அச்சமில்லை அச்சமில்லை பாடல் பாரதியார் | Achchamillai Achchamillai Bharathiyar Songs in Tamil | Bharathiyar Kavithaigal Achamillai
[பண்டாரப் பாட்டு]
பாரதியார் கவிதைகள் அச்சமில்லை:
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத்
தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே. 1
கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து
நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற்
படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே. 2
காவியங்கள்: கற்பனையும் கதையும்
பாரதியாரின் கண்ணன் என் காதலன் பாடல்கள் – kannan en kadhalan bharathiyar kavithaigal
பாங்கியைத் தூது விடுத்தல்
(தங்கப் பாட்டு மெட்டு)
ரசங்கள்: சிருங்காரம், ரௌத்ரம்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் —
(அடி தங்கமே தங்கம்)
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் — பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். 1
Bharathiyar Kavithaigal – சமூகம்
பெண் விடுதலை கவிதை
விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடையவள் சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்.
இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர்,
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? 1
புதுமைப் பெண் கவிதை – Pen Kavithai
புதுமைப் பெண் கவிதை – Puthumai Pen Bharathiyar Kavithai – புதுமை பெண் பாடல்கள்
போற்றி போற்றிஓர் ஆயிரம் போற்றி! நின்
பொன்ன டிக்குபல் லாயிரம் போற்றிகாண்!
சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதரசே எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ! 1
பாரதியார் பெண் கவிதைகள்
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும். 1
பாரதியார் கவிதைகள் – Bharathiyar Vasana Kavithaigal in Tamil – Bharathiyar Quotes Tamil
கவலையும் பயமும் எனக்கு பகைவர் நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன் அதனால் மரணத்தை வென்றேன் நான் அமரன்
மகாகவி பாரதியார் கவிதை
பாரதியார் கவிதைகள் அச்சமில்லை – Bharathiyar Kavithaigal Achamillai – Bharathiyar Achamillai Kavithai:
பாரதியார் கவிதைகள் அச்சமில்லை – Bharathiyar kavithai achamillai:-
எவனையும் வெற்று காகிதம் என ஒருபோதும் எண்ணாதே…
ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான் நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்..
பாரதியார் வசன கவிதைகள் – Bharathiyar vasana kavithaigal in tamil:-
இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
மகாகவி பாரதியார் கவிதை
இதையும் கிளிக் செய்யுங்கள் –> பகவத் கீதை பொன்மொழிகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |