Home Remedies for Hair Growth and Thickness in Tamil
பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி இன்றைய சூழலில் உள்ள அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் தலைமுடி உதிர்ந்து வழுக்கை வருவது. இதனை போக்குவதற்காக நாமும் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் நல்ல பலனை அளித்ததா என்றால் இல்லையென்று தான் நம்மில் பலரின் பதிலாக இருக்கும். ஆனால் எந்த வித செலவும் அலைச்சலும் இல்லாமல் வழுக்கையாக உள்ள தலையிலும் நன்கு காடுபோல் முடிவளர வைக்கக்கூடிய சில டிப்ஸ்களை பற்றி இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How Hair Grow Faster in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- ஆளி விதைகள் – 2 டீஸ்பூன்
- அரிசி – 1 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் (Olive Oil) – 2 டீஸ்பூன்
- வைட்டமின் E கேப்சூல் – 2
- தண்ணீர் – தேவையான அளவு
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் ஆளி விதைகள் மற்றும் 1 டீஸ்பூன் அரிசி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்=> தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் தலையில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரத்திற்கு இருமுறை என்று ஒரு மாதம் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் தலையில் முடியில்லாத இடத்திலும் புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.
How to Grow Hair Faster Naturally in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- அரிசி – 2 டீஸ்பூன்
- வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன்
- கிராம்பு – 10
- ஆளி விதைகள் – 2 டீஸ்பூன்
இதையும் படியுங்கள்=> உங்கள் தலைமுடியை எப்பொழுதும் மிருதுவாக வைத்திருக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்
மேலே கூறியுள்ள பொருட்களை அனைத்தையும் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் ஒரு மிக்சி ஜாரில் நாம் ஊறவைத்த பொருட்கள் அனைத்தையும் அதில் உள்ள தண்ணீருடன் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதனை உங்களின் தலையில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரத்திற்கு இருமுறை என்று ஒரு மாதம் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் தலையில் முடியில்லாத இடத்திலும் புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.
இதையும் படியுங்கள்=> கொய்யா இலையை இப்படிக்கூட பயன்படுத்தலாமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |