ரம்ஜான் ஸ்பெஷல் ஜெய்ப்பூர் பட்டாணி பூரி | Jaipur Peas Puri in Tamil
நண்பர்களே வணக்கம்..! ரம்ஜான் வந்துவிட்டது வீட்டில் மதிய நேரத்தில் அதிகளவு பிரியாணி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் என்ன சாப்பிடுவார்கள் என்றால் எப்போதும் போல் இட்டி தோசை என இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையிலே என்ன கதை என்றால் எப்போதும் போல் சமைத்து சாப்பிடுவதற்கு இதுபோன்ற ஜெய்ப்பூர் பட்டாணி பூரி செய்து சாப்பிடலாம். சரி வாங்க அது எப்படி செய்வது என்று பார்க்கலாம்..! இது என்ன பூரி புதுசா இருக்கு, செய்வது கஷ்டம் என்று யோசிப்பீர்கள். ஆனால் செய்வது மிகவும் சுலபம் ஆகும். அதனால் இப்பதிவின் வாயிலாக ஈசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
Jaipur Peas Puri in Tamil:
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 2 கப்
- ஓமம் – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- பச்சை பட்டாணி – 50 கிராம்
- இஞ்சி – 1 துண்டு
- பச்சை மிளகாய் – 2
- சீரகம் – 1 ஸ்பூன்
- பெருங்காயம் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
- சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
- தனியா தூள் – 1/2 ஸ்பூன்
- மிளகாய் இடித்தது – 1/2 ஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, ஓமம் – 1/2 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து புரிக்கு பிசைவது போல் பிசைந்து வைக்கவும். அதன் மீது கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி அதனை அப்படியே வைக்கவும்.
அதன் பின்பு ஒரு மிக்சி ஜாரில், பச்சை பட்டாணி – 50 கிராம், இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய் – 2 சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளவும்.
ராஜ்மா புலாவ் இப்படி செஞ்சு பாருங்க..! டேஸ்ட் செமயா இருக்கும்
அடுத்து ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் கூடவே அரைத்து வைத்துள்ள பட்டாணியை போட்டு வதக்கிக் கொள்ளவும். கூடவே கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன், தனியா தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் இடித்தது – 1/2 ஸ்பூன் சேர்த்து கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அதன் பிறகு அதனை அப்படியே Off பண்ணிடுங்க..!
அடுத்து நாம் பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு கப் போல் செய்து அதில் பட்டாணியை உள் வைத்து அதனை சரியாக மடித்து அதனை பூரி போல் மெதுவாக தேய்த்து கொண்டு ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சூப்பராக இருக்கும்.
இதன் மீது மிக்ஸர், தயிர் மாதுளை போட்டு உங்களுக்கு பிடித்த உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
புதினா புலாவ் செய்முறை உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |