Kulanthai Kavingar Yaar
பொது அறிவு சார்ந்த வினா விடைகளை பற்றி பதிவு செய்து வருகின்றோம். இன்றைய காலத்தில் பலரும் தங்களை அரசு தேர்வுகளுக்கு தயார் வருகின்றனர். அரசு பொதுத்தேர்வில் பொது அறிவு வினா விடை ஒரு பகுதியாக கேட்கப்படுகிறது. அதனால் நீங்கள் தினமும் ஒரு பொது அறிவு வினா விடைகளை நாம் தெரிந்து வைத்து கொள்வதன் மூலம் அரசு நடத்தும் பொது தேர்வுகளில் கலந்து கொள்ளும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆக அரசு தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் என்று அறிந்து கொள்ளலாம் வாங்க..
Kulanthai Kavingar Valliappa
குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் அழ.வள்ளியப்பா. இவரை பற்றிய தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
Kulanthai Kavingar Valliappa Story | பிறப்பு:

இவர் 1922-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். ஐந்தாம் வயதில் தான் பிறந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்த அழகப்பன் என்பவருக்குத் தத்துப்பிள்ளையாகச் சென்றார். இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. தி. ஜ. ரங்கநாதனின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். “ஆளுக்குப் பாதி” என்னும் தம் முதல் கதையை எழுதினார்.இந்த கதைக்கு அவருக்கு கிடைத்த பாராட்டு பிற்காலத்தில் இவரை எழுத்தாளராக மாற்றுவதற்கு காரணமாக இருந்தது.
தொழில்கள்:
1940-ம் ஆண்டில் கோவிந்தன் சென்னை சக்தி பத்திரிக்கை அலுவலகத்தில் காசாளராக சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. ஜ ரங்கநாதன் அவர் ஊக்குவித்ததன் காரணமாக ஆளுக்கு பாதி 2என்னும் முதல் கதையா எழுத ஆரம்பித்தார்.
1941-ம் ஆண்டு இந்தியன் வங்கியில் பணியாற்றினார், இதில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போதே கவிதையும், கட்டுரையும் எழுத தொடங்கினார். வங்கி வேலையிலுருந்து ஓய்வு பெறும் வரை எழுதி கொண்டிருந்தார்.இங்கே பணியாற்றும் போதெ பிப்ரவரி 2, 1942-ம் ஆண்டு வள்ளியம்மை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகப்பன் என்ற மகனும், அலமேலு, கஸ்தூரி, உமையாள், தேவி என நான்கு மகள்களும் பிறந்தனர்.
அதுமட்டுமில்லாமல் பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித் தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.
இலக்கிய தொண்டு:
அழ.வள்ளியப்பா என்ற பெயரானது எல்லாரும் மனதிலும் பதிருப்பதற்கு காரணமாக இருந்தது அவர் குழந்தைகளுக்காக வெளியிட்ட மலரும் உள்ளம் என்ற நூல் தான் காரணமாக இருக்கிறது. அதன் பிறகு சிரிக்கும் பூக்கள் என்ற கவிதையை வெளியிட்டார் இதன் மூலம் தான் குழந்தை கவிஞர் எண்று அழைக்கப்பட்டார். இவர் உடல் நிலை குறைபாடு காரணமாக 1989 மார்ச் 16 அன்று இந்த உலகத்தை விட்டு பிரிந்தார்.
நூல்கள்:
- அம்மாவும் அத்தையும்
- இனிக்கும் பாடல்கள் (பாடல்); இ.பதி. செப்டம்பர் 1991; குழந்தை புத்தக நிலையம், சென்னை; 27 பாடல்கள்
- ஈசாப் கதைப் பாடல்கள் – முதல் தொகுதி (பாடல்) குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40;
- ஈசாப் கதைப் பாடல்கள் – இரண்டாம் தொகுதி (பாடல்) குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40;
- ஈசாப் கதைப் பாடல்கள் (பாடல்); முழுயான தொகுப்பு; 1987 ஜனவரி; குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40; 38 பாடல்கள்
- உமாவின் பூனைக் குட்டி
- எங்கள் கதையைக் கேளுங்கள் (விலங்கியற் கட்டுரைகள்); மு.பதி 1962; இ.பதி மார்ச் 1967; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 10 விலங்குகள் தங்களது கதையைத் தாங்களே கூறுகின்றன.
- எங்கள் பாட்டி
- கதை சொன்னவர் கதை – நூல் 1 (வரலாறு); மே 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
- கதை சொன்னவர் கதை – நூல் 2 (வரலாறு); மே 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
- கதை சொன்னவர் கதை – நூல் 3 (வரலாறு); மே 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
- குதிரைச் சவாரி (நெடுங்கதை); ஏப்ரல் 1978; பழநியப்பா பிரதர்ஸ், சென்னை
குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் முதல் தொகுதி (பாடல்): 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 50 பாடல்கள் - குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி (பாடல்); 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை;
- குழந்தைக் கவிஞரின் வேடிக்கைப் பாடல்கள்; 1962
- குழந்தைக்குரல் (பாடல்) தமிழ்நிலையம், புதுக்கோட்டை; பாடல்கள்கேள்வி நேரம்
- சிட்டுக் குருவி (பாடல்); ஜனவரி 1949; தமிழ்நிலையம், புதுக்கோட்டை; 16 பாடல்கள்
- சிரிக்கும் பூக்கள் (பாடல்); 1986; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 110 பாடல்கள்
- சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல்); 6-ம் பதிப்பு 1992; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 26 பாடல்கள்
- சின்னஞ்சிறு வயதில் (வரலாறு), குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 38 பேர்களின் இளமைக்கால
- அனுபவங்கள்; தமிழ்நாடு அரசினர் பரிசுபெற்றது
- சுதந்திரம் பிறந்த கதை (வரலாறு)
- சோனாவின் பயணம் (கதை)
- திரும்பி வந்த மான் குட்டி (கதை)
- நமது நதிகள்: தென்னாட்டு ஆறுகள் (புவியியல்), தேசிய புத்தக டிரஸ்ட், புதுதில்லி. 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது
- நல்ல நண்பர்கள் (கதை); பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
- நான்கு நண்பர்கள்: பஞ்சதந்திரக் கதைகள் (கதை); நவம்பர் 14, 1962; எஸ்.ஆர்.சுப்பிரமணியபிள்ளை, திருநெல்வேலி
- நீலா மாலா (கதை); ஆகஸ்ட் 1977; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை
- நேரு தந்த பொம்மை (பாடல்கள்); நவம்பர் 14, 1977; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 21 பாடல்கள்
- நேருவும் குழந்தைகளும் (வாழ்க்கை வரலாறு); 1963;
- பர்மா ரமணி (கதை); 1969; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை
- பாப்பாவுக்குப் பாட்டு (பாடல் தொகுதி); தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
- பாட்டிலே காந்தி கதை (பாடல் வரலாறு); அக்டோபர் 1968; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; இந்திய ஒன்றிய அரசின் பரிசு பெற்றது
- பாட்டுப் பாடுவோம் (பாடல்); ஏப்ரல் 1998; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 12 பாடல்கள்
- பாடிப் பணிவோம் (பாடல்); அக்டோபர் 1979; செல்வி பதிப்பகம், காரைக்குடி; 23 பக்திப்பாடல்கள்
- பாலர் பாடல் (பாடல்); ஆகஸ்ட் 1947; தமிழ்நிலையம், புதுக்கோட்டை; 18 பாடல்கள்
- பிள்ளைப் பருவத்திலே! (வரலாறு); 1968; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 29 பெரியோர்களைப் பற்றிய
- கட்டுரைகள்; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
- பெரியோர் வாழ்விலே முதல் தொகுதி (வரலாறு); 1955; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; எழுவர் வாழ்க்கை
- நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரைகள்; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
- பெரியோர் வாழ்விலே இரண்டாம் தொகுதி (வரலாறு); குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; ஐவர் வாழ்க்கை
- நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரைகள்
- மணிக்கு மணி
- மலரும் உள்ளம் முதல் தொகுதி (பாடல்), முதற்பதிப்பு 1944; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; 23 பாடல்கள் கொண்டது,
- மலரும் உள்ளம் முதல் தொகுதி (பாடல்), இரண்டாம்பதிப்பு 1954; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 135
- பாடல்கள் கொண்டது; இந்திய ஒன்றியம்; தமிழ்நாடு அரசுகளின் பரிசு பெற்றது.
- மலரும் உள்ளம் இரண்டாம் தொகுதி (பாடல்), 1961; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 117 பாடல்கள்
- மல்லிகை (பாடல்)
- மிருகங்களுடன் மூன்று மணி
- மூன்று பரிசுகள்
- ரோகந்தாவும் நந்திரியாவும்
- ரோஜாச் செடி (கதை); மூன்றாம் பதிப்பு மே 1968; ஸ்டார் பிரசுரம், சென்னை
- வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம், 1979, வானதி பதிப்பகம், சென்னை
- வாழ்க்கை விநோதம்
- விடுகதை விளையாட்டு
- வித்தைப் பாம்பு (மொழிபெயர்ப்புக் கதை)
- வெளிநாட்டு விடுகதைகள்
- வேட்டை நாய்
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














