What is The Reason Why Ramadan is Called As Thirunal in Tamil
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் ரம்ஜான் பண்டிகை ஏன் ஈகை திருநாள் என்று அழைக்கப்படுகிறது..? என்பதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்கப்போகின்றோம். ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை மிகவும் விமர்ச்சியாக கொண்டாடுவார்கள். அதிலும் இஸ்லாமிய நண்பர் நமக்கும் இருந்தால் போதும். நமக்கும் ரம்ஜான் ரொம்பவே ஸ்பெஷலாக தான் இருக்கும்.
சரி நாமும் நம் பதிவின் வாயிலாக ரம்ஜான் பண்டிகை மற்றும் ரம்ஜான் நோன்பு பற்றி பல பதிவுகளை உங்களுக்கு தெரிவித்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ரம்ஜான் பண்டிகை ஏன் ஈகை திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..!
ரம்ஜான் பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா..
ரம்ஜான் பண்டிகை ஏன் ஈகை திருநாள் என்று அழைக்கப்படுகிறது..?
பொதுவாக ரம்ஜான் இஸ்லாமியர்களின் புனித மாதமாக இருக்கிறது. இது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடிக்கும் மாதமாக இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து இஸ்லாமியர்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.
இப்படி ரம்ஜான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பதால், அவர்கள் செய்த பாவம் அல்லாஹ் அவர்களால் மன்னிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த மாதத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நரகவாசல் மூடப்பட்டிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
சரி இந்த ரமலான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாக இருக்கிறது. இந்த பண்டிகையை ஈகை திருநாள் என்றும் சொல்வார்கள். அதுபோல ரம்ஜான் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
ரமலான் வரலாறு என்னவென்று உங்களுக்கு தெரியுமா..
ஈகை திருநாள் என்றால் என்ன..?
சரி பொதுவாக ரம்ஜான் பண்டிகையை ஈகை திருநாள் (ஈத் அல் பித்ர் – Eid al-Fitr) என்று அழைக்கிறார்கள். இந்த ஈத் அல் பித்ர் என்பது சில நேரங்களில் ‘ஈத்’ என்று சுருக்கப்பட்டு அழைக்கப்டுகிறது.
இந்த ஈகை திருநாள் என்பது ரமலானின் முடிவைக் கொண்டாடும் ஒரு முஸ்லிம் பண்டிகையாக இருக்கிறது. அதுபோல ஈத் என்றால் அரபு மொழியில் ‘பண்டிகை’ என்று பொருள் தருகிறது. மேலும் ஈத் அல்-பித்ர் என்றால் ‘நோன்பு திறக்கும் பண்டிகை’ என்று அர்த்தமாகும்.
மேலும் ரமலான் நோன்பு மாதத்தின் இறுதியில் ஈதுல் பித்ர் அதாவது ஈகை திருநாள் வருகிறது. அதனால் தான் ரம்ஜான் ஈகை திருநாள் என்று அழைக்கப்படுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |