எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை
சில பேர் வீட்டில் இருக்கும் டென்சன் மற்றும் வேலையில் இருக்கும் டென்சனை வெளியில காட்டி கொள்ள மாட்டார்கள். ஆனால் எப்படி இவ்வளவு கஷ்டம் இருக்கிறது நமக்கு தெரியும் ஆனால், அதனை வெளியில காட்டி கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்திருப்போம். அதற்காக ஏதும் ட்ரை செய்கிறார்களா என்று கூட யோசித்தியொருபோம். அதனால் தான் இந்த பதிவில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் கடைபிடிப்பது என்னவென்று அறிந்து கொள்வோம்.
வெளிப்படை:
பொதுவாக நாம் எதையாவது புதிதாக செய்தால் யாரவது அந்த செயலை சுட்டி காட்ட வேண்டும் என்று நினைப்போம். எடுத்துக்காட்டாக நீங்கள் புதிதாக ஒரு ஆடை போட்டு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளவோம். நீங்கள் இதனை போடும் போது யாராவது இந்த ட்ரெஸை பார்த்து நல்லா இருக்கும் என்று கூறுவார்கள் என்று நினைப்பீர்கள். அதனால் உங்களுடைய ட்ரெஸ்ஸை பார்த்து நல்லா இருக்கு என்று கூறினால் மகிழ்ச்சி அடைவீர்கள். அதுவே ஒருவரும் எதுமே சொல்லவில்லை என்றால் கவலை அடைவீர்கள். அதனால் நீங்கள் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது.
உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை தெரியுமா.?
பேசும் முறை:
நீங்கள் மற்றவர்களுடன் பேசும் போது அவர்கள் கேட்கின்ற கேள்விற்கு பதிலை கூற வேண்டும். ஏனென்றால் அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு பதிலை நீங்கள் அதிகமாக கொடுக்கும் போது எதிரே உள்ளவர்கள் அதனை சரியாக கேட்க மாட்டார்கள். இதனை நினைத்து வருத்தப்படுவீர்கள். அதனால் பேசுவதை சரியாக பேசுங்கள்.
அறிவை வளர்ப்பது:
தினமும் ஏதவாது புதிய புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும். இது போல புது புதிதான விஷயங்களை கற்று கொள்ளும் போது அவர்களே திருப்பதி அடைவார்கள். இதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாம் எந்த விஷயங்களை கற்று கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிற நேரத்தில் எதையாவது நினைத்து கவலை அடைவோம்.
உதவும் குணம்:
உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது மனதானது திருப்தி அடையும். மேலும் நெனெகல் உதவி செய்பவர் சந்தோசம் அடைந்தால் அதனை பார்த்து நீங்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
சிரிப்பது:
நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ளுங்கள், நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது மகிழ்ச்சியாக பேசுங்கள். உதாரணத்திற்கு மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களை பற்றி மற்றவர்கள் குறை கூறினால் அதில் மாற்றி கொள்ளலாம் என்று நினைத்தால் அதனை மாற்றி கொள்ளுங்கள். இல்லை உங்களுக்கு அது தேவையில்லாதது என்று நினைத்தால் அந்த விஷயத்தை அங்கையே மறந்து விடுங்கள். அதனை அப்படியே நினைத்து கொண்டே இருக்காதீர்கள்.
மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |