வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விவசாயம் கவிதை | Vivasayam Quotes in Tamil

Updated On: November 3, 2025 6:02 PM
Follow Us:
vivasayam quotes in tamil
---Advertisement---
Advertisement

விவசாயம் கவிதை

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நாம் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் விவசாயம் பற்றிய கவிதைகளை பார்ப்போம். ஒவ்வொரு மண்ணின் மைந்தனுக்கு தேசப்பற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விவசாயத்தின் மீதான பண்பும் இருக்க வேண்டும். வாங்க நாம் விவசாயின் உணர்வை கவிதை நடையில் பார்க்கலாம்.

Agriculture Vivasayam Quotes in Tamil:

சினிமா பார்ப்பவர்கள் எல்லாம்
சினிமாவில் நடிக்க ஆசைப்படுவார்கள்..
ஆனால் சோறு சாப்பிடும் நாமெல்லாம்
விவசாயம் செய்ய ஆசைப்படுவதில்லை.

vivasayam kavithai

விவசாயம் கவிதை வரிகள்:

கடன் பட்டாலாவது காட்டை விளைய வைக்கனும் னு நினைப்பான் விவசாயி

மண்ண நம்பி மனசார உழைக்கிறவன் விவசாயி…அது விளையும் விலை மலியுமோ…தெரியாது

தான் பட்டினிக் கிடந்தாலும் தன்னை நம்பி உள்ள ஆடு மாடு பட்டினிக் கிடக்க கூடாது னு நினைக்கிறவன் தாங்க விவசாயி

கஷ்டப்பட்டு உழச்சும் கையில எதுவுமே தங்காம காலத்துக்கும் கடன்காரனா வாழனுங்றது விவசாயி தலையெழுத்தோ என்னவோ

வெளஞ்சா விலை இல்ல…விலை இருந்தா வெளச்சல் இல்ல இது விவசாயிகளின் தலையெழுத்து….

வீட்டுக்கொரு விவசாயி இருந்த காலம் போய் வீட்டுக்கொரு இன்ஜீனியர் என்ற காலம் மாறிவிட்டது

விவசாயம் என்பது அனைத்து தொழில்களுக்கும் வேர் போன்றது…

உயிர் விதைப்பவன் கடவுள் என்றால் உயிர் வாழ விதை விதிப்பவனும் கடவுளே

Vivasayam Kavithai in Tamil:

ஒருநாள் அரசனும் ஆண்டி ஆவான்,
வரும் நாள் உழவனும் அரசன் ஆவான்..
வீழ்வது நாமாக இருந்தாலும்
வெல்வது விவசாயமாக இருக்கட்டும்.!

vivasayam kavithai in tamil

விவசாயம் பற்றிய கவிதை:

காட்டில் வேலை செய்பவனை
கேவலமாகவும்.. கணினியில் வேலை
செய்பவனை கௌரவமாகவும்
நினைப்பவர்களுக்கு தெரியவில்லை..
“அரிசியை” இன்டெர்நெட்டில்
டவுன்லோட் செய்ய முடியாது என்று.!

vivasayam kappom kavithai in tamil

Vivasayam Kavithai:

இந்த நாளில் ஊருக்கு உணவளித்து உவகை கொள்ளும் விவசாயிகளின் அருமை உணர்வோம்…விவசாயத்தை காப்போம்…

விவசாயிகளின் வாழ்க்கை வெளிச்சமாக இருந்தால் தான் மற்றவர்களின் வாழ்க்கையில் இருள் சூழாமல் இருக்கும்.

விவசாயத்தை ஒரு பூர்விக தொழிலாகவோ பாரம்பரியமாகவோ கருதாமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒரு அரசு ஊழியரை போல் மதித்து உயிர்ப்பளித்தால் விவசாயமும் வியந்து பார்க்கும் தொழிலாக மாறும்

உழுது உழைப்பவனின் உள்ளம் குளிர்ந்தால் தான் உண்ணுபவனின் வயிறும் நிறையும்

பட்டினி கூட ஒரு விவசாயியை தன் வேலையை செய்ய விடமால் நிறுத்தியது இல்லை.

பேஞ்சு கெடுத்தாலும் காஞ்சு கெடுத்தாலும் ஊருக்கு கொடுக்க உழைத்து கொண்டே இருப்பவன் உழவன்

ஏர்பிடித்து உழுத போதும் இயந்திரம் கொண்டு உழும் போதும் ஏமாற்றம் என்ற ஒன்று விடவில்லை விவசாயியை

ஒரு விவசாயி உற்பத்தி செய்த பொருளை அனைவரும் சாப்பிடுகிறோம்; ஆனால் விவசாயி சாப்பிட்டானா இல்லையா என்பதை பார்க்க தான் மறந்து விடுகிறோம்.

காடு மேடாய் திரிந்தும் கால் வயிற்று கஞ்சிக்கு வழியில்லாமல் வாழும் விவசாயிகளின் வாழ்க்கை கொடுமையானது

விவசாயம் பற்றிய கவிதைகள்:

தகுதி பார்க்கும் மக்களே..
விவசாயிகளின் கால்பட்ட
அரிசியை தான் கழுவி உண்கிறீர்கள்
என்பதை மறந்து விட வேண்டாம்.

agriculture kavithai in tamil

Agriculture Vivasayam Kavithai in Tamil:

போலியான மருத்துவர்..
போலியான பொறியாளர்..
என்று கேள்விப்பட்டிருப்போம்
ஆனால் எங்கேயும்
“போலியான விவசாயி” என்று
கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால்
விவசாயிகளுக்கு போலியாக
இருக்கவும் தெரியாது..
போலியாக நடிக்கவும் தெரியாது.

vivasayam agriculture kavithai in tamil

விவசாயி வசனம்:

ஏறு பூட்டி
விதை விதைத்து
முப்போகம்
விளைச்சல்யென்று
விவசாயம் பார்த்து
தலை நிமிர்ந்து
நடந்து சென்றான்
விவசாயி… ம்ம்
அது அந்த காலம்…!!

ஆனா… இந்த காலமோ
என்னவென்று சொல்வது
விவசாயம் பார்ப்பவன்
வீதியில் நிற்கின்றான்
விதை பொருளை
வாங்குவதற்கும்
விளைந்த பொருளை
விற்பதற்கும்

இயற்கை கவிதை
மழை கவிதை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now