Ingredients for Puliyogare Powder in Tamil
நீங்கள் ஒரு புளியோதரையின் பிரியர் என்றால்.. இந்த பதிவு உங்களுக்கானது தான் இந்த பதிவு.. ஆம் வாசகரே.. புளியோதரை ருசியாக இருப்பதற்கு முக்கிய காரணமே அதற்கு தனியாக தயார் செய்து புளியோதரையில் சேர்க்கப்படும் ஒரு பொடி தான் முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.
அந்த பொடி எப்படி செய்ய வேண்டும் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த பொடிக்கு என்னென்ன பொருட்கள், எந்த அளவு சேர்க்க வேண்டும் என்று தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. புளியோதரை பொடியை நாம் சரியான முறையில், சரியான அளவில் தயார் செய்து சாதத்தில் கலந்தோம் என்றால், அதனுடைய சுவை வேற அளவில் இருக்கும். உங்களுக்கு இந்த புளியோதரை பொடி செய்ய தெரியாது என்றால் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், இங்கு புளியோதரை பொடி செய்ய என்னே பொருட்கள் தேவைப்படும் என்பது குறித்து பார்ப்போம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்
புளியோதரை பொடி செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும்?
Ingredients
- கடலை பருப்பு - 100 கிராம்
- வெள்ளை உளுந்து - 50 கிராம்
- கொத்தமல்லி விதை - 20 கிராம்
- வெந்தயம் - ஒரு ஸ்பூன்
- கடுகு - ஒரு ஸ்பூன்
- வரமிளகாய் - 50 கிராம்
- புளி - 100 கிராம்
- பெருங்காயம் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
Instructions
புளியோதரை பொடி செய்முறை – Puliyogare Powder Recipes in Tamil:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கடலை பருப்பு, உளுந்து, கொத்தமல்லி விதை இவை அனைத்தையும் தனி தனியாக சிவக்க வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து வெந்தயம் சிவந்து வரும் வரை வருது தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு 50 கிராம் மிளகாயை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் எண்ணெய் இருந்தால் பரவா இல்லை அதில் 100 கிராம் புளியை சேர்த்து நன்கு ஈரப்பதம் போகும் வரை வருது எடுத்துக்கொள்ளுங்கள்.
வறுத்த அனைத்து பொருட்களையும் தனி தனியாக நன்கு ஆறவைத்துக்கொள்ளவும்.
வருந்த பொருட்கள் ஆறியதும் முதலில் புளியை மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும், பின் அதனுடன் மிளகாயை சேர்த்து அரைக்க வேண்டும், பின் அதனுடன் வறுத்த கடலை பருப்பு, வெந்தயம், கடுகு, உளுந்து, கொத்தமல்லி விதை ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்.
இறுதியாக அதனுடன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், பெருங்காயம் தூள் 1/2 ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து எடுத்தால் போதும் புளியோதரை பொடி தயார்.
பயன்படுத்தும் முறை:
ஒரு கப் சாதத்திற்கு இரண்டு ஸ்பூன் புளியோதரை பொடி போதுமானது, காரம் அதிகமாக சாப்பிடுபவர்கள் என்றால் இன்னும் ஒரு ஸ்பூன் கூடுதலாக சேர்த்து கிளறிக்கொள்ளம்.
சாதத்தை கிளறி பிறகு ஒரு தாளிப்பை அத்துண்டன் சேர்க்க வேண்டும்.
இதற்கு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு உளுந்தம்பருப்பு ஒரு ஸ்பூன், இரண்டு கொத்து கருவேப்பில்லை மற்றும் ஒரு கைப்பிடியளவு வேர்க்கடை சேர்த்து தாளித்து அதனை சாதத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான புளியோதரை தயார்.
குறிப்பு:
உங்களுக்கு விருப்பம் இருந்ததுனா 1/2 ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் எள்ளு செய்துகொள்ளலாம். ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள செய்முறையில் இவை இரண்டும் சேர்க்கப்படவில்லை.
மேலும் இந்த புளியோதரை பொடியை நீங்கள் பிரிட்ஜியில் வைத்து இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |