இரத்த உறைவு
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் வாழும் இந்த காலம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நமக்கே நன்றாக தெரியும் அல்லவா..! அதாவது எங்கு பார்த்தாலும் புகை மண்டலமும், துரித உணவுகளும், காற்று மாசுபடும் என்று தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகளை தான் சந்தித்து வருகிறோம். அதனால் நமக்கு எந்த நோய்கள் வந்தாலும் ஆச்சர்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் இந்த காலத்தில் நோய்க்கான மருந்துகளை விட பல நோய்களை தான் கண்டறிந்து வருகிறார்கள். அதுபோல நாம் தினமும் இந்த பதிவின் மூலம் ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று உடம்பில் இரத்தம் உறைந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்று பார்க்கலாம் வாங்க..!
இரத்த உறைவு அறிகுறிகள்:
இரத்த உறைவு அறிகுறிகளை தெரிந்து கொள்வதற்கு முன் இரத்த உறைவு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இரத்த உறைவு என்பது பிளேட்லெட்டுகள், புரதங்கள் மற்றும் இரத்தத்தில் உள்ள செல்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும் போது உருவாகும் இரத்தத்தின் நிறை என்று சொல்லப்படுகிறது. அதுபோல நீங்கள் காயமடையும் போது, உங்கள் உடல் இரத்தக் கசிவை நிறுத்த இரத்த உறைவை உருவாக்குகிறது.சில நேரங்களில் நமக்கு ஏதாவது ஒரு இடத்தில் அடிபடும். நாம் அந்த நேரத்தில் அந்த இடத்தை லேசாக தடவி விட்டு, ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்து அப்படியே விட்டுவிடுவோம். அது தான் நாளடைவில் இரத்த உறைதலை ஏற்படுத்துகிறது.
👉உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..
அதுபோல இரத்தம் உறைவதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அது என்ன அறிகுறிகள் என்று கீழ் காணலாம்.
- உடல் தசைகளில் ஏதோ ஒரு இடத்தில் துடிப்பது போன்ற உணர்வு
- தசைப்பிடிப்பு
- தசைகளில் வலி
- வீக்கம்
- தசைகள் சிவத்தல்
- கால் அல்லது கையில் வெப்பம்
- திடீர் மூச்சுத் திணறல்
- கூர்மையான மார்பு வலி (நீங்கள் சுவாசிக்கும்போது மோசமாக இருக்கலாம்)
- இருமல்
- இருமும் போது இரத்தம் வருவது
மேலும் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
நுரையீரல் செயலிழந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |