வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்திய ஐந்தாண்டு திட்டம் pdf | Inthandu Thittam in Tamil

Updated On: February 27, 2025 3:48 PM
Follow Us:
Inthandu Thittam in Tamil
---Advertisement---
Advertisement

ஐந்தாண்டு திட்டம் | Five Year Plan in India in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் இந்திய ஐந்தாண்டு திட்டம் பற்றிய விவரங்களை பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம் வாங்க. இந்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்கள் என்பது 1947-2017 வரையில் இந்திய பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாக கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்திய அரசானது 12 ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டமே (2012-2017) இறுதியான ஐந்தாண்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014-ல் அமைந்தவுடன் இந்திய ஐந்தாண்டு திட்டங்கள் – திட்ட கமிசன் கலைத்து விட்டு புதிய அமைப்பாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. இந்த பதிவில் இந்திய அரசு செயல்படுத்தி வந்த ஐந்தாண்டு திட்டத்தை பற்றி ஒரு கண்ணோட்டம் பார்க்கலாம் வாங்க..

இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இத்திட்டத்தின் முக்கிய பணியாகும். இத்திட்டத்தின் முதல் தலைவராக ஜவகர்லால் நேரு அவர்கள் இருந்தார். இதன் மூல நிறுவனம் இந்திய நிதி அமைச்சகம் ஆகும்.

Inthandu Thittam in Tamil pdf Download

5 Aandu Thittam:

5 Aandu Thittam

முதல் ஐந்தாண்டு திட்டம் | First Five Year Plan in India in Tamil (1951-1956):

  1. முதல் ஐந்தாண்டு திட்டமானது ஹாரேட் டாமர் (Harrod-Domar) மாதிரியை அடிப்படையாக் கொண்டது.
  2. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மையை முன்னேற்றம் செய்வதாகும்.
  3. இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கை விட அதிகம்) வெற்றி பெற்றது.

இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் | Second Five Year Plan in India in Tamil (1956-1961):

  1. இரண்டாவது ஐந்தாம் திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. Mahalanobis) மாதிரியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டது.
  2. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.
  3. இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் | Third Five Year Plan in India in Tamil (1961-1966):

  1. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தை “காட்கில் திட்டம்” (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.
  2. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.
  3. சீன – இந்தியப் போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6%-ஐ அடைய இயலவில்லை.

ஐந்தாண்டு திட்டத்தின் விடுமுறை காலம் | Five Year Plan Holiday (1966-1969):

  1. மூன்றாம் ஐந்தாவது திட்டம் தோல்வியும் மற்றும் இந்திய பாகிஸ்தான் போர் காரணமே இந்த திட்டத்தின் விடுமுறை காரணம்.
  2. இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நான்காம் ஐந்தாண்டு திட்டம் | Fourth Five Year plan in India in Tamil (1969-1974):

  1. நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன. அவை: நாட்டின் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைவதாகும்.
  2. இத்திட்டம் அதன் இலக்கான 5.7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தது.
அனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்

ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் | Fifth Five Year Plan in India in Tamil (1974 -1979):

  1. இந்த ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
  2. ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.86 வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
  3. இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P.தார் (DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978-ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே) கைவிடப்பட்டது.

சூழல் திட்டம்:

  1. 1978-1979-ம் ஆண்டு ஒரு வருட திட்டம் காலத்திற்காக இச்சுழல் ஆரம்பம் ஆகியது.
  2. இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கப்பட்டது.

ஆறாம் ஐந்தாண்டு திட்டம் | Sixth Five Year Plan in India in Tamil (1980-1985):

  1. ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். “வறுமை ஒழிப்பு” (GARIBI HATAO) என்பதே இந்த திட்டத்தின் முதல் இலட்சியம்.
  2. ஆறாம் ஐந்தாண்டு திட்டம் முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
  3. இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு 5.2%. ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.

ஏழாம் ஐந்தாண்டு திட்டம் | Seventh Five Year Plan in India in Tamil (1985-1990):

  1. இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  2. முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாகதனியார்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
  3. இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.

எட்டாம் ஐந்தாண்டு திட்டம் | Eighth Five Year Plan in India in Tamil (1992-1997):

  1. எட்டாம் இந்தாண்டு திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித  மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
  2. இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபட்டது.
  3. இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 6%. ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.

எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை பெற்றவை பின்வருமாறு:

  • அதிகமான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்
  • மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்
  • அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம் 15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும் எழுத்தறிவின்மையைப் போக்குதல்
  • அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், அடிப்படை மருத்துவ வசதிகளை அளித்தல், நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்
  • விவசாய வளர்ச்சி, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல்
  • மின்னாற்றல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.

ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் | Ninth Five Year Plan in India in Tamil (1997-2002):

  1. சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது.
  2. இத்திட்ட கால இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை.
  3. இந்தியப் பொருளாதாரம் 5.0% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.

பத்தாம் ஐந்தாண்டு திட்டம் | Tenth Five Year Plan in India in Tamil (2002-2007):

  1. இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
  2. இத்திட்டம் 2012-ம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
  3. இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.01. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.

இலக்குகள்:

  • வறுமையைக் குறைப்பது
  • வேலைவாய்ப்பைப் பெருக்குவது
  • 2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது
  • மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2 விழுக்காடாகக் குறைப்பது
  • 2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது
  • குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது
  • பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது
  • வனப் பரப்பை அதிகரிப்பது
  • 2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்
    மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துதல்

பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டம் | Eleventh Five Year Plan in India in Tamil (2007-2012):

  1. இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”.
  2. இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.

பனிரெண்டாம் ஐந்தாண்டு திட்டம் | Twelfth Five Year Plan in India in Tamil (2012-2017):

  1. இதன் முதன்மை நோக்கம் “விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.
  2. இதன் வளர்ச்சி இலக்கு 81% ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now