Akshaya Tritiya 2022: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் அட்சய திருதியை 2022-ல் எப்போது வருகிறது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுவோம். அட்சயம் என்றால் “வளர்வது” என்று பொருளாகும். சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதியை அக்ஷய திருதியை என்று சொல்கிறோம். இந்த அட்சய திருதியை நன்னாளன்று எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம். இன்றைய நாளில் கோயிலுக்கு செல்லுதல், பித்ரு காரியம், இல்லாதவர்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றை இந்த திருநாளில் செய்யலாம். அட்சய திருதியை அன்று தங்கத்தில் முதலீடு செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும். மேலும் இந்த புனிதமான அக்ஷய திருதியை சிறப்பு நாளில் ஏழை எளியவர்களுக்கு உணவு, தானங்கள் வழங்கி வந்தால் உடல் நல குறைவில்லாமல் நெடுநாள் வாழலாம்..! இந்தாண்டு அட்சய திருதியை உங்களுக்கு வளமான எதிர்காலத்தை அளிக்க வாழ்த்துகிறோம். அந்த வகையில் அட்சய திருதியின் தேதி மற்றும் முகூர்த்த காலத்தினை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.
புதிய வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்து உட்கொள்ள, வெளிப்பயணம் மேற்கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>