ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற..!
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. இன்றிய பதிவு அனைவருக்கும் மிகவும் பயன்படும் ஒரு பதிவாக இருக்கும். பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருடைய வாழ்விலும் சரி ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும். பிரச்சனை இல்லாத வாழ்கை யாருக்குமே கிடையாது. அப்படிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு அற்புதமான பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். அதுவும் இந்த பரிகாரத்திற்கு ஒரு கைப்பிடியளவு உப்பு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் இருந்தால் மட்டும் போதும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கல் உப்பு பரிகாரம்:
பொதுவாக உப்பு என்பது ஒரு ஆன்மிகம் பொருளாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் இந்த கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும் இதன் காரணமாக தான் கல் உப்பை ஆன்மிக பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:
- கல் உப்பு – ஒரு கைப்பிடியளவு
- தண்ணீர் – ஒரு கிளாஸ்
- கண்ணாடி டம்ளர் – 1
பரிகாரத்தை செய்யும் முறை:
இரவு உறங்குவதற்கு முன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அதாவது ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கல் உப்பு ஒரு கைப்பிடியளவு மற்றும் அந்த கண்ணாடி டம்ளர் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
இந்த டம்ளரை நீங்கள் படுக்கும் இடத்திற்கு அருகாமையில் வைத்து உங்கள் மனதில் நிறைவேற வேண்டிய விஷயங்களை மனதில் நினைத்து அந்த விஷயம் நிறைவேற வேண்டும் என்று பிராத்தனை செய்துவிட்டு உறங்க செல்லுங்கள்.
பின் மறுநாள் இரவு இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் அல்லது நீரோட்டம் உள்ள இடத்தில் ஊற்றிவிட்டு மீண்டும் இது போன்று செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் நம்பிக்கையுடன் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் மனதில் நினைத்த காரியம் வெற்றிபெறும்.
மேலும் கல் உப்பு பரிகாரம் தொடர்புடைய பதிவுகளை பார்க்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் 👇
கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்..!
வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..!
வீட்டில் கல் உப்பை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது ஏன் தெரியுமா..?
வீட்டில் பணமழை பொழிய உப்பு ஜாடிக்கு கீழ் இந்த பொருளை மட்டும் வையுங்கள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |