Teacher Student Jokes
நம் முன்னோர்கள் காலத்தில் வேலை இல்லாத நேரங்களில் வாசலில் வந்து அமர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுவார்கள். இதனால் அவர்களின் மனது மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் பரபரப்பு நிறைந்த உலகமாக இருக்கிறது. இதனால் வேலை விட்டு வந்த பிறகு நாலு செவுத்துக்குள்ளயே தான் இருக்கிறார்கள். கரண்ட் இல்லேன்னாலும் கூட வெளியில் வர மாட்டிக்கிறார்கள். காரணம் மொபைல் தான். உங்களின் மன அழுத்தம், கவலையை மறந்து சிரிப்பதற்கு சில ஜோக்ஸ்களை பதிவிட்டுள்ளோம் அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Teacher Student Jokes in Tamil:
1. புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
விடை: ஆம்புலன்ஸ் வரும்
2.இந்த கணக்கை முட்டாள் கூட ஈசியாக செய்திடுவான்
விடை: அதான் சார் நீங்க ஈஸியா பண்ணிட்டீங்க
3.ஒரு மனிதன் உயரமாக வேண்டுமென்றால் என்ன செய்யணும்
விடை: அந்த மனிதன் ஹை ஹீல்ஸ் போடணும்
4.10-ம் நூற்றாண்டில் உலகம் எப்படி இருந்தது
விடை: அப்பவும் இலக்கம் உருண்டையாக தான் இருந்தது
5.ஏன்டா நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் வரையமா வச்சு இருக்க
விடை: சார் அது வாயில்லா ஜீவன் சார்
6.கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்.?
விடை: சொறிஞ்சு விடணும் சார்
7.டேய், ஏண்டா தரைல உக்காந்து கணக்கு போட்டுகிட்டு இருக்குற?
விடை: நீங்க தானே சொன்னீங்க டேபிள் உபயோகிக்காம கணக்கு போடுன்னு!.
8. ஏன்டா 20 நாள் காலேஜ்-க்கு வரல?
விடை: சார்.. எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு.
9.என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டரா இருக்கான், சுமரா படிச்சவன் பஸ் கண்டக்டரா இருக்கான், இதுல இருந்து என்னத்தெரியுது.
விடை: ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கிற வேலையில இருக்காங்க-னு தெரியுது.
10. எதுக்குடா வகுப்புக்கு கழுதையை ஓட்டிட்டு வந்திருக்க?
விடை: உங்களுக்கு எல்லாம் பாடம் நடத்தறதை விட ஒரு கழுதைக்கு பாடம் நடத்தலாம்-னு சொன்னீங்களே சார்.. அதான் .
ஆசிரியர், மாணவன் ஜோக்ஸ்:
ஆசிரியர் : நா இன்னும் ஒரு வருஷத்துல ரிட்டையர்டு ஆக போறேன்பா
மாணவன்: தேம்பி தேம்பி அழுகிறான்
ஆசிரியர்: அழுவதாப்பா…. நா இன்னும் ஒரு வருஷம் இங்க இருப்பேன்
மாணவன்: அத நெனைச்சாதான் சார் அழுகை வருது எனக்கு
ஆசிரியர் ரெண்டு பேர் ஒரு ஹோட்டலுக்கு போய் நாலு நாலு இட்லி ஆர்டர் பண்றாங்க அதை சாப்பிட்டதும் அவங்களுக்கு food poison ஆகிடிச்சி ஏன்
மாணவன் :ஏன்னா அது நாலு நாள் இட்லி
ஆசிரியர் ஏன்டா இன்னைக்கு ஹோமேஒர்க் பண்ணல
மாணவன்: கரண்ட் இல்லை டீச்சர்
ஆசிரியர் மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிக்க வேண்டியது தான
மாணவன்: ஆமா டீச்சர் முயற்ச்சி பண்ணேன் தீப்பெட்டி இல்லை
ஆசிரியர் ஏன்.?
மாணவன்: தீப்பெட்டி சாமி ரூம் ல இருந்தது அதான்
ஆசிரியர் உள்ளே பொய் எடுக்க வேண்டியது தான
மாணவன்: நான் குளிக்கல அதான் சாமி ரூம் உள்ளே போகல
ஆசிரியர் குளிக்கலாய ஏன்.?
மாணவன்: மேல டேங்க்ல தண்ணி இல்ல
ஆசிரியர் மோட்ரு போட்டு ஏத்த வேண்டியது தான எரும
மாணவன்: லூசு மாதிரி பேசாதீங்க டீச்சர் அதான் முதல சொன்ன கரண்ட் இல்லன்னு
4. ஆசிரியர்: ராமு இங்க வா… நான் உன்கிட்ட முதல்ல 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் 2 பேனா கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட
மாணவன்: ஐந்து பேனா இருக்குது சார்
ஆசிரியர்: நான் சொன்னத ஒழுங்க கவனிச்சியா இல்லையா? முதல்ல 2 பேனா கொடுத்தேன். அப்றம் மீண்டும் 2 பேனா தந்தேன். இப்ப உன்கிட்ட எத்தனை பேனா இருக்கு? கரெக்டா சொல்லு பார்ப்போம்
மாணவன்: ஐந்து பேனா இருக்குது சார்
ஆசிரியர்: சரி உன் வழிக்கே வரேன். முதல்ல 2 சாக்லேட் கொடுக்கிறேன் அடுத்தது திரும்பவும் 2 சாக்லேட் கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட இப்ப எத்தனை சாக்லேட் இருக்கும்?
மாணவன்: 4 சாக்லேட் சார்
ஆசிரியர்: குட் பாய்.. இப்ப திரும்பவும் வரேன்.. நான் உன்கிட்ட 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் வேற 2 பேனாக்கள தரேன். அப்டின்னா இப்ப எத்தனை பேனா மொத்தமா இருக்குது
மாணவன்: 5 பேனா சார்
ஆசிரியர்: அடேய் ஏன்டா உசுற வாங்குற.. சாக்லேட் மட்டும் 4 வருது, பேனா எப்டிடா 5 வரும்
மாணவன்: சார், என் கிட்ட ஏற்கனவே ஒரு பேனா இருந்ததால ஐந்துன்னு சொன்னேன். சாக்லேட் எதுவும் இல்லாததால 4 அப்டின்னு சொன்னேன்
ஆசிரியர்: சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. கெளம்பு
இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்கஉங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது
கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்
உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்
| மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |














