Thangadurai Jokes With Answers
மனிதர்களின் வாழ்க்கையில் சந்தோசம் என்பது முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் இன்றைய காலத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதனால் வேலையில் உள்ள மன அழுத்தம், வீட்டில் உள்ள டென்சன் போன்றவற்றால் மன அழுத்தத்திற்கு ஆளாகுக்கிறார்கள். அதனால் அவர்களை refresh செய்வதற்கு மொபைலை தான் பார்க்கிறார்கள். இதில் காமெடி வீடியோ, ஜோக்ஸ் போன்றவற்றை பார்த்து சிறிது கொண்டிருப்போம். அந்த வகையில் கடி ஜோக்ஸ் என்பதற்கு பெயர் பெற்றவர் தான் தங்கதுரை. இவருடைய ஜோக்ஸ் ஆனதுஎல்லாம் கடி ஜோக்ஸ் ஆக தான் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் தங்கதுரை ஜோக்ஸ் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Thangadurai Jokes in Tamil With Answers:
1.எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA?
விடை: மிக்சி
2. புறா அணில் இரண்டில் எதுக் கிட்ட Letter கொடுத்தா அது சரியான Address க்கு போய்ச் சேரும்?
விடை: அணில் தான். ஏன்னா அது கிட்ட தான் Pin code இருக்கு.
3. ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?
விடை: ஏன்னா அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.
4. அதிக Weight தூக்குற பூச்சி எது?
விடை: மூட்டை பூச்சி
5. வேலைக்கு போற விலங்கு எது?
விடை: பனி கரடி.(பணி -Work)
6. பொருள் வைக்க Use பண்ண முடியாத பை எது?
விடை: பொருள் வைக்க Use பண்ண முடியாத பை தொப்பை.
7. ஆபத்தான City எது?
விடை: Electricity (எலக்ட்ரிசிட்டி )
8. Calendar க்கு பிடித்த பழம் எது?
விடை: பேரிச்சப்பழம் (Dates)
9. என்னதான் நீங்க பெரிய வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்ச திரும்ப அடிக்க முடியுமா?
10. எலிக்கு ஏன் வால் இருக்கு?
விடை: எலிக்கு ஏன் வால் இருக்குன்னா அது செத்த தூக்கிப்போடறதுக்கு தான்.
Thangadurai Jokes With Answers PDF Download in Tamil
11. ஒரு English தெரிஞ்ச மாடு Thetre போனதாம் அங்க போனதும் கதவை கடிக்க ஆரம்பிச்சிட்டாம். ஏன்?
விடை: ஏனா அந்த கதவுல Pullனு எழுதி இருந்திச்சாம்.
12. ஒருத்தர் வேகமா Ration Card எடுத்துட்டு ஒடி போகிறார். அப்போது அவர் அரிசி வாங்குவாரா இல்ல சர்க்கரை வாக்குவாரா?
விடை: அவரு அரிசி வாங்க மாட்டாரு சர்க்கரையும் வாங்க மாட்டாரு, மூச்சு தான் வாங்குவாரு.
13. என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாதாம்
14. ஒரு வீட்ல மூணு பசங்க first பையன் பால்ல தண்ணி கலந்தான் கண்டுபிடிச்சுட்டாங்க ரெண்டாவது பையன் பால்ல தண்ணி கலந்தான் கண்டுபிடிச்சுட்டாங்க. ஆனா மூணாவது பையன் பால்ல தண்ணி கலக்கும்போது கண்டு பிடிக்கலையாம் ஏன்?
விடை: ஏன்னா அந்த பையன் பாலிடெக்னிக் முடிச்சு இருக்கானாம்
15. ஒரு பாட்டு போட்டு ஆட முடியாது அது என்ன பாட்டு?
விடை: நிப்பாட்டு
16. ஒருத்தவங்க சூப்பரா சமைப்பாங்க ஆனா ஒரு காரம் பண்ணா மட்டும் சாப்பிட முடியாது ஏன்?
விடை: ஏன்னா அது நமஸ்காரம்
17. ஒருத்தனுக்கு செம பசியாம் ஸ்ட்ரைட்டா போயிட்டு மழையில நனைந்த உடனே பசி போயிடுச்சாம் ஏன்?
விடை: ஏன்னா அது அடை மழையாம்
18. திருப்பதிக்கு மொட்டை அடிக்கலாம்னு போனா அங்க ஃபுல்லா ஆம்பளைங்களா மொட்டை அடிச்சு இருந்தாங்க ஏன்?
விடை: என்னா அது மேல் திருப்பதி
19. டெய்லியும் ஒரு பசி வரும் அதை விட்டுவிடு வருஷத்துக்கு ஒரு வாட்டி வரும் பசி அது என்ன பசி?
விடை: ஐப்பசி
20. எம்பிளாய்மென்ட் வேலைக்கு எழுதி போட ‘கால் லெட்டர்’ வந்துச்சு ஆனா நான் வேலைக்கு போகல ஏன்?
விடை: முழு லெட்டர் வரல
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |