Funny Kadi Jokes in Tamil with Answers
மனிதனாக பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். அப்பொழுதெல்லாம் நமது மனம் மிகவும் அமைதியை இழந்து மிகவும் சோர்வாக இருக்கும். அப்பொழுதெல்லாம் நமது மனதின் சோர்வை போக்கி அதனை மகிழ்ச்சிப்படுத்த நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வோம் அதாவது புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது மேலும் ஒரு சிலர் ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நமது மனதில் உள்ள சோர்வை போக்க நாம் கேட்கும் ஜோக்ஸ்களினால் நமது மனதில் உள்ள துன்பம் எளிதில் மறைந்து விடும். அப்படி உங்களின் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸ்களை இந்த பதிவில் பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து சிரியுங்கள்..!
Sema Kadi Jokes in Tamil
- வெற்றிலையுடன் சேராத பாக்கு எது.?
விடை: வேற எது மைசூர் பாக்கு தான்.
2. கிணத்துக்குள்ள கல்லை போட்ட ஏன் முழ்குது.?
விடை: ஏன்னா அதுக்கு நீச்சல் தெரியாதுல.
3. எல்ல ஆவியையும் பிடிக்கலாம் ஆனா ஒரே ஒரு ஆவியை மட்டும் பிடிக்கவே முடியாது.?
விடை: கொட்டாவி.
4. உலகத்துலேயே எந்த நரி பெரிய நரி.?
விடை: Dictionary.
5. ஒரு Stage-ல பாடுறவங்க எல்லாரும் கையில Gloves போட்டு பாடுறங்க ஏன்.?
விடை: ஏன்னா அவங்க குத்துப்பாட்டு பாடுறாங்க அதான்.
இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்கஉங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது
6. ஒரு பையன் Exam-ல Paper-ஐ திருப்பித் திருப்பிப் பார்த்தானாம் ஏன்.?
விடை: ஏன்னா அது திருப்புதல் தேர்வு.
7. ஒரு கங்காருவால எல்.ஐ.சி பில்டிங் விட உயரமாக குதிக்க முடியுமா.?
விடை: ஓ முடியுமே! எல்.ஐ.சி பில்டிங்கால குதிக்கவே முடியாதுல்ல. அதனால கங்காரு அதைவிட உயரமா குதிச்சிடும்.
8. கை இருக்கிற மரம் எது.?
விடை: முருங்கை மரம் தான்.
9. நாம் ஏன் தண்ணிய குடிக்கிறோம்.?
விடை: ஏன்னா நம்மால அதை சாப்பிட முடியாதுல அதான்.
10. கால்களே இல்லாத Table எது.?
விடை: Time Table தான்.
கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |