நற்சிந்தனை துளிகள் | Sinthanai Thuligal

Advertisement

சிந்தனை துளிகள் | Sinthanai Thuligal in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நற்சிந்தனை துளிகள் பற்றி பார்க்கலாம். நம்முடைய வாழ்வில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் வாழ வேண்டும். எந்த ஒரு செயலையும் நல்ல சிந்தனையுடன் செய்ய வேண்டும். அப்பொழுது தான் நாம் செய்யும் செயலில் வெற்றியடைய முடியும். இப்பொழுது நாம் இந்த தொகுப்பில் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் பொன்மொழிகளை பார்க்கலாம் வாங்க.

சிந்தனை துளிகள் – நற்சிந்தனை துளிகள்:

திட்டம் இல்லாமல்
தொடங்கப்படும் நாள்..!
மன நிறைவோடு முடிவதில்லை.

narchinthanai thuligal

Sinthanai Thuligal in Tamil:

கடமையை செய்யாமல்
நேரத்தை வீணடிப்பது..!
உங்களுக்கு நீங்களே
செய்யும் மாபெரும் துரோகம்

narchinthanai

நற்சிந்தனை துளிகள்:

எந்த இக்கட்டான
சூழ்நிலையிலும் நீங்கள் சாதிக்க
பிறந்தவர் என்பதை நினைவில்
வையுங்கள்

narchinthanai thuligal in tamil

சிந்தனை துளிகள் – Sinthanai Thuligal in Tamil:

நல்லதே நடக்கும் என்று
சொல்லாமல் நல்லதே நடக்கிறது
என்று சொல்லுங்கள்..!

sinthanai thuligal in tamil

சிந்தனை துளிகள்:

நீங்கள் எந்த அளவிற்கு
தன்னம்பிக்கையுடன்
இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு
வாழ்க்கையில் உயரலாம்..!

sinthanai thuligal

நற்சிந்தனை வரிகள்:

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால் தோல்வி!

நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்னு நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை! – லியோ டால்ஸ்டாய்

எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல் எதிர்த்து நில் – சுவாமி விவேகானந்தர்

வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு… தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு – வைரமுத்து

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்.-முண்டாசுக் கவிஞன்

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர்,
விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர். – திருக்குறள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். — திருக்குறள்
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

தமக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைபவர்கள் ,
யார்க்கும் தீவினைகளை செய்யக்கூடாது – தெய்வப்புலவர் வள்ளுவர்

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள் – தெய்வப்புலவர் வள்ளுவர்

Sinthanai Thuligal:

sinthanai thuligal

சிறந்த தமிழ் Motivational Quotes Collection..! Good Inspirational Quotes in tamil

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement