செயற்கை மழை
இயற்கை நமக்கு கொடுத்த வரம் மழை. ஆனால் இப்போது மனிதனின் செயற்கைத்தனத்தாலும் பருவநிலை மாறுபாடு காரணமாகவும் மழையின் அளவு வருடத்திற்கு வருடம் குறைத்துக்கொண்டு வருகிறது. பூமியை குளிர்விக்க மழை தேவைப்படுகிறது. மழை குறைந்ததால் பூமியின் வெப்ப அளவு அதிகரிக்கிறது. மனிதன் அனைத்திற்கும் மாற்று வழி கண்டுபிடிக்கின்றான். இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அப்படி தான். இயற்கை கொடுத்த மழையையும் செயற்கையாக உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது இன்றைய அறிவியல். என்னதான் செயற்கையாக உருவாக்கினாலும் இயற்கைக்கு ஈடு செய்ய முடியாது. ஆனாலும் வறட்சியை போக்க இது போன்ற அறிவியல் வளர்ச்சிகள் மக்களுக்கு பெரிதும் தேவைப்படுகிறது. அறிவியல் வளர்ச்சி இன்று ஆகாயத்தையும் மிஞ்சிவிட்டது. அந்த வகையில் இன்று மாசுவை ஒழிக்க வறட்சியை போக்க என செயற்கை மழைகள் பெரிதும் பயன்படுகிறது. அந்த செயற்கை மழை எவ்வாறு உருவாக்க படுகிறது. அதில் இயற்கையின் பங்கு என்ன போன்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Artificial rain in tamil:
செயற்கை மழை:
செயற்கை மழை (Artificial rain) என்பது வளிமண்டலத்தில் இருக்கும் மேகங்களில் வேதிப்பொருட்களைத் தூவி, மழை பெய்ய வைக்கும் ஒரு செயல்முறையாகும். இதை மேக விதைப்பு (Cloud seeding) என்றும் அழைக்கின்றனர்.
செயற்கை மழைக்கு பயன்படுத்தபடும் வேதிப்பொருட்கள்:
செயற்கை மழை உருவாக்க பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, வெள்ளி அயோடைடு (Silver iodide), திட கார்பன் டை ஆக்சைடு (Solid carbon dioxide) மற்றும் திரவ புரப்பேன் (Liquid propane) போன்ற வேதிப்பொருட்கள் மேகங்களின் மீது தூவப்படும். இந்த வேதிப்பொருட்கள் மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் மற்றும் பனிக்கட்டிகள் உறைய உதவுகின்றன. இதனால், மேகங்கள் கனம் அடைந்து மழை பெய்கிறது.
செயற்கை மழையின் ஆரம்பம்:
செயற்கை மழை உருவாக்குவது ஒரு புதிய தொழில்நுட்பம் அல்ல. இது 1960-களில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை. செயற்கை மழை உருவாக்குவதை மேலும் மேம்படுத்தவும், அதன் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அமெரிக்க வேதியியல் ஆராய்ச்சியாளர் வின்சென்ட் ஜோசப் ஸ்ஷேபர் செயற்கை மழையை கண்டுபிடித்தவர் ஆவார். இவரது சோதனை முயற்சிக்கு 1946-ல் வெற்றி கிடைத்தது.
செயற்கை மழை உருவாக்கத்தில் மூன்று நிலைகள் உள்ளன.
1 காற்றழுத்தத்தை உருவாக்குதல்,
2. மழை மேகங்களை திரட்டுதல்,
3. மழை மேகங்களை குளிரச் செய்தல்.
செயற்கை மழை உருவாக்குவதற்கு விமானங்கள், ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேகங்களின் மீது வேதிப்பொருட்களைத் தூவ, இந்த வாகனங்கள் மேகங்களுக்கு மேல் பறக்கின்றன அல்லது மேகங்களின் நடுவே செல்கின்றன.
மேகங்களின் வெப்பநிலையானது பூஜ்ஜியம் டிகிரிக்கு மேல் இருந்தால் அவை வெப்ப மேகங்கள் அதுவே பூஜ்ஜியம் டிகிரிக்கு குறைவாக இருந்தால் அவை குளிர்ந்த மேகங்கள் எனப்படும்.
வெப்ப மேகங்கள் மழை பொழிவை தராது. வெப்ப மேகங்கள் மீது வெள்ளி அயோடைடு அல்லது உலர் பனிக்கட்டியை தூவும்போது அவை குளிர்ந்த மேகங்களாக மாறுகின்றன. குளிர்ந்த மேகங்கள் மழையாக மாறுகிறது.
அதிக குளிர்ச்சி அடைந்த மேகங்களும் மழை பொழிவை தராது. அப்போது மேகங்களை குளிர செய்து மழை பெய்ய செய்யப்படுகிறது.
செயற்கை மலையின் பயன்பாடு:
செயற்கை மழை உருவாக்குவதன் நோக்கம், வறட்சியான பகுதிகளுக்கு மழை கொண்டுவருவதாகும். மேலும், காடு தீயை அணைக்க, பனிப்பாறைகளை உருவாக்க மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் போது மழையைத் தடுக்க செயற்கை மழை பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், செயற்கை மழை உருவாக்குவது சவாலான ஒரு செயல்முறையாகும். மேலும், இது எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை. செயற்கை மழை உருவாக்கம் தோல்வி அடைய பல காரணங்கள் உள்ளன. இதில், தவறான வானிலை நிலைமைகள், தவறான வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் மேகங்களின் தவறான இடத்தில் வேதிப்பொருட்களைத் தூவுவது ஆகியவை அடங்கும்.
செயற்கை மழை உருவாக்குவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், செயற்கை மழை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கவலை உள்ளது.
இதுபோன்று பயனுள்ள அறிவியல் தகவல் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | அறிவியல் |