இலங்கை ரயில் பயணம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரயில் பயணத்தை அனைவரும் விரும்புவார்கள். இதற்கு முக்கிய காரணம் விலை குறைவு, உடல் வலி இருக்காது போன்ற காரணத்தினால் அதிகமானவர்கள் தேர்வு செய்கிறார்கள். மேலும் குடும்பத்தோடு சுற்றுலா சென்றால் மகிழ்ச்சியாக செல்வதற்கு ரயில் உகந்தவையாக இருக்கிறது. ரயில் பயணத்தை பற்றி சொல்லப்போனால் சொல்லி கொண்டே இருக்கலாம். அதனால் இந்த பதிவில் ஒரு ரயிலானது 68 ரயில் நிலையங்களை கடந்து செல்கிறது. அவை எந்த ரயில், எந்த ஊருக்கு செல்லும் ரயில் போன்ற விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
68 ரயில் நிலையங்களை கடந்து செல்லும் ரயில்:
இலங்கையில் தேயிலை மற்றும் காபி போக்குவரத்துக்கு இருந்தது ரயில் பாதை தான். இன்றைய காலத்திலும் அப்படியே தான் இருக்கிறது. அதில் உலகில் சிறந்த ரயில் பாதையான கொழும்பு முதல் பதுளை வலி செல்லும் ரயிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
ஐரோப்பியர்கள் அவர்கள் பயிரிட்ட தேயிலை மற்றும் காபியை அவர்கள் நாட்டிற்கு கடல் வழியாக எடுத்துச்சென்றனர். மலைகளில் இருந்து கடற்கரைக்கு எடுத்து வரும் வாகனமாக ரயில்கள் இயக்கப்பட்டது.
1867 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து தண்டி வரை ரயில் வழி அமைக்கப்பட்டது, பிறகு 1874 ஆம் ஆண்டு நாவலப்பட்டி, 1885 ஆம் ஆண்டு நானு ஓயா, 1894 ஆம் ஆண்டு பண்டாரவளை, 1924 ஆம் ஆண்டு பதுளை வரை நீட்டி பயணிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா..?
இந்த ரயிலானது தேயிலை தோட்டங்கள், நீர் வீழ்ச்சிகள், மலை நிலப்பரப்புகள், அழகிய காடுகள் போன்ற இயற்கை காட்சிகள் போன்றவை இருக்கிறது.
இந்த ரயிலானது ரயில்வே பொறியியலின் சாதனையை படைத்துள்ளது. நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள நாடிமண் தலைநகர் கொழும்புவை மத்திய பகுதிகளுக்கு இணைக்கும் பாதையாக உள்ளது.
இந்த ரயிலானது 292 கிலோ மீட்டரை கடக்கும் பொழுது 48 சுரங்க பாதைகளையும், 68 ரயில் நிலையங்களையும் கடந்து செல்கிறது.
சுற்றிலும் காடு, நடுவே ஆறு, அருவிக்கு மேலே பாலம் கட்டி அதில் ரயில் போனால் புது விதமான அனுபவமாக இருக்கும். இந்த அழகான விஷயம் இலங்கையில் உள்ள கொழும்பு-பதுளை ரயிலில் பயணம் தான்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |