நார்த்தங்காய் பயன்கள்
நார்த்தங்காய் என்றவுடன் நினைவிற்கு வருவது ஊறுகாய் தான். இதனை பலரின் வீட்டில் ஊறுகாயை செய்து சாதத்திற்கு தொட்டு சாப்பிடுவார்கள். மேலும் இந்த நார்த்தங்காயை ஜூஸ் செய்தும் குடிக்கலாம், நன்கு பழுதுவிட்டால் அப்படியேவும் சாப்பிடலாம். நாம் சாப்பிடும் உணவு பொருட்களின் ருசியை அறிந்தால் மட்டும் போதாது. அதில் உள்ள நன்மை மற்றும் தீமைகளையும் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் நார்த்தங்காய் நன்மைகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
நார்த்தங்காய் நன்மைகள்:
சாப்பிட்ட பிறகு நடப்பவரா நீங்கள்.! அப்போ இதையும் தெரிஞ்சுக்கோங்க..!
மலச்சிக்கல் பிரச்சனை:
மலசிக்கல் பிரச்சனை இருந்தால் நார்த்தங்காயை உணவில் அதிக சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் சிறுநீரக கற்கள் பிரச்சனையும் சரி செய்ய கூடிய சக்தி நார்த்தங்காய்க்கு உள்ளது.
இதய ஆரோக்கியம்:
இதய பிரச்சனை, பக்க வாதம், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்ச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்ள உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
நார்த்தங்காயில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முடியும்.
சாப்பிட பிறகு வாயு தொலையா.. காரணம் என்ன தெரியுமா
வாயு தொல்லை:
குடலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளிருந்து விடுபடுவதற்கு நார்த்தங்காய் உதவுகிறது.
வாயு தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு நார்த்தங்காயை பிழிந்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த சாற்றுடன் சிறிதளவு வெந்நீர் கலந்து கொண்டு குடிக்க வேண்டும். இப்படி செய்வதனால் வாயு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் நார்த்தங்காய் உதவுகிறது. இதற்கு நீங்கள் நார்த்தங்காயை எப்படி வேண்டுமானலும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வயிற்று புண்:
வயிற்று புண்ணை சரி செய்வதற்கு நார்த்தங்காய் உதவி செய்கிறது. இதற்கு நார்த்தங்காயை வட்ட வடிவில் நறுக்கி, அதில் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து கொள்ளவும். இதனை ஒரு 5 நாட்களுக்கு காய விடவும். பிறகு இவை நமக்கு ஊறுகாவாக கிடைத்திருக்கும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்று புண்ணை சரி செய்யலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |