IPC Section 123 and 124 in Tamil
இன்றைய சூழலில் அதிகரித்துள்ள குற்றங்களை குறைப்பதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களின் சட்ட ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதே போல் தான் நமது இந்தியா நாட்டிலும் நடக்கும் அநீதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கின்றதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது.
அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம்.காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன. அதே போல் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 123 மற்றும் 124 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
ஒருவர் குற்றம் செய்தால் 10 பேருக்கு தண்டனையா
IPC Sections 123 in Tamil:
யாராவது ஒரு இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுப்பதற்கான ஒரு திட்டம் தீட்டுகிறார் என்று தெரிந்தும் அதனை பற்றி அரசாங்கத்திடம் தெரிவிக்காமல் மறைப்பது குற்றமாகும்.
இத்தகைய குற்றத்தை புரிந்தவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
கலகத்தில் ஈடுபட்டால் இந்த தண்டனை தான் கிடைக்கும்
IPC Sections 124 in Tamil:
யாராவது ஒருவர் இந்திய அரசாங்கத்தின் குடியரசுத்தலைவர், அல்லது ஏதாவதொரு மாநிலத்தின் ஆளுநரை சட்டவிரோதமாக தாக்கினால் அல்லது தக்க முயற்சித்தால் அது குற்றமாகும்.
இத்தகைய குற்றத்தை புரிந்தவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
பயங்கரமான ஆயுதங்களை பயன்படுத்தினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |