வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒருவர் குற்றம் செய்தால் 10 பேருக்கு தண்டனையா..?

Updated On: June 3, 2023 8:37 AM
Follow Us:
IPC Section 149 and 150 in Tamil
---Advertisement---
Advertisement

IPC Section 149 and 150 in Tamil

இன்றைய சூழலில் அதிகரித்துள்ள குற்றங்களை குறைப்பதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களின் சட்ட ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதே போல் தான் நமது இந்தியா நாட்டிலும் நடக்கும் அநீதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கின்றதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது. அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம்.காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன. அதே போல் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 149 மற்றும் 150 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

கலகத்தில் ஈடுபட்டால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

IPC Sections 149 in Tamil:

சட்டவிரோதமான கூட்டத்தைச் சேர்ந்த நபர்களில் யாராவது ஒருவர் மக்களுக்கும் நமது நாட்டின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும் வகையில் ஏதாவது ஒரு குற்றத்தை செய்தால் அப்பொழுது அந்தச் சட்டவிரோதமான கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் அந்தக் குற்றத்தில் நேரடிப் பங்கு உண்டு.

எனவே அவர்கள் அனைவருமே இந்திய தண்டனை சட்டம் பிரிவு 149-ன் படி குற்றம் புரிந்தவர்கள் ஆகின்றார்கள். எனவே அவர்கள் புரிந்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனையைப் பெறுவர்கள்.

பயங்கரமான ஆயுதங்களை பயன்படுத்தினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

IPC Sections 150 in Tamil:

சட்டவிரோதமான கூட்டத்திற்காக ஆட்களை சேர்ப்பது குற்றம் ஆகும். அப்படி இணைக்கப்பட்ட ஒருவர் மக்களுக்கும், நமது நாட்டின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும் வகையில் ஏதாவது ஒரு குற்றத்தை செய்தால், குற்றத்தை செய்த நபருக்கும் அந்த நபரை கூட்டத்தில் இணைத்த உறுப்பினருக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 150-ன் படி குற்றம் புரிந்தவர்களாக ஆகின்றார்கள். எனவே அவர்கள் புரிந்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனையைப் பெறுவர்கள்.

சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now