கூகுள் வைத்த செக்
ஹலோ நண்பர்களே..! உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..? என்னவென்று யோசிக்கிறீர்களா..? அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். அதற்கு முன் உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா..? இது என்ன கேள்வி என்று சொல்வீர்கள். உண்மை தான் இன்றைய நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி நாம் அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் Play Store ஆப் கண்டிப்பாக இருக்கும். அப்படி Play Store ஆப்பில் கூகுள் எடுத்துள்ள மாற்றம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉https://bit.ly/3Bfc0Gl |
லோன் ஆப்களுக்கு கூகுள் வைத்த செக் என்ன தெரியுமா..?
பொதுவாக நாம் பயன்படுத்தும் Play Store ஆப்பில், ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் லோன் ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல நபர்கள் மோசடிக்கு ஆளாவது அதிகமாகி வருகிறது. எனவே இதனை தடுக்கும் விதமாக கூகுள் நிறுவனமானது இந்திய அரசுடன் இணைந்து ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதை பற்றி இங்கு காணலாம்.
கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் லோன் ஆப்கள் மக்களுக்கு தொந்தரவுகளை தந்து வருகின்றன. இதன் மூலமாக பல மோசடிகள் நடைபெறுகிறது. எனவே கூகுள் நிறுவனம் இந்திய அரசுடன் இணைந்து இதில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
உங்களின் வாட்ஸப்பிற்கு ஆபத்து.. இதை மட்டும் செய்யாதீர்கள் |
அதாவது ஜூன் மாதம் முதல் Google Paly Store மூலமாக கிடைக்கும் இந்த லோன் ஆப்கள் பயனாளர்களின் Contacts, Photos, Videos, Location மற்றும் Call Log போன்றவற்றை அணுக முடியாது. மேலும் இதுபோன்ற பொருளாதார சேவைகளை வழங்க நினைக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து ஆப்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், ரிசர்வ் வங்கியின் மூலமாக License பெற்ற ஒரு Digital Loan App, அதன் உண்மை தன்மையை நிரூபிக்க ஒரு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இதுபோன்ற ஆப்கள் கூகுள் உருவாக்கிய ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதுபோன்ற ஆப்கள் மூலமாக வரும் மோசடிகளை தடுக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனத்திடம் இந்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. மேலும், மோசடிகளில் ஈடுபட்டு வரும் செயலிகள் தொடர்ந்து Play Store –லிருந்து நீக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்டேட்டூனா இப்படி தாங்க இருக்கனும் வேறு எதுல நம்ம வாட்சப்ல தான்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |