Veetil Palli Varamal Iruka
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் பல்லி நடமாட்டம் இருப்பது சகஜம். பேய்களை பார்த்து கூட பயப்படாத பெண்கள் பல்லிகளை பார்த்து தான் அதிகம் பயப்படுகிறார்கள். சில நேரம் பல்லிகள் ஒன்றுக்கொன்று சண்டைபோட்டுக்கொண்டு மேலே வந்து விழுந்து விடும். அந்த நேரத்தில் மிகவும் அச்சமாக இருக்கும். நம் மீது விழுந்தாலும் தட்டி விட்டுடலாம். சாப்பாட்டில் விழுந்துவிட்டால் என்ன செய்வது. அது பெரிய ஆபத்தை தந்துவிடும். பெரும்பாலும் பள்ளிகள் சமையலறையில் தான் அதிகம் இருக்கின்றன. இதனை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் பல்லி சாப்பாட்டிலோ குடிக்கும் டீ , பால் போன்றவற்றில் விழுந்தால் அது தெரியாமல் நாமும் சாப்பிட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். பல்லியை எப்படி வீட்டில் இருந்து விரட்டியடிப்பது என இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
பல்லி வராமல் தடுக்க என்ன செய்யலாம் :
பல்லிகள் மிகவும் விஷத்தன்மை உடையவை. சில பேர் பல்லிகள் வீட்டில் இருப்பது நன்மை என நினைத்து அது வராமல் இருக்க எந்த தடுப்பு முயற்சியும் எடுக்க மாட்டார்கள். இது உண்மையில் நல்லதல்ல இப்படி செய்தால் பல்லிகள் வீட்டில் பெருகிவிடும். இப்படி பல்லிகள் வீட்டில் பெருகிவிட்டால் மேலே விழுவது சாப்பாட்டில் விழுவது என் இடையூறுகளை ஏற்படுத்தும். சிலர் பல்லி உடலில் எங்காவது விழுந்து விட்டால் உடனே என்ன பலன் என ஆராய்ந்து அந்த நாளை இதை வைத்தே ஓட்டி விடுவார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பல்லிகளை கொலை செய்ய வேண்டாம். வீட்டிற்குள் பல்லிகளை வராமல் தடுத்தால் போதும். அதனை விரட்டுவது எப்படி என பார்ப்போம்.
முதல் நாள் இரவே ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு பச்சை மிளகாய் காம்புகளை நீக்கி விட்டு பச்சை மிளகாயை போட்டு கொள்ளுங்கள். அதோடு கொஞ்சமாக இரண்டு ஸ்பூன் வினிகர் சேர்த்து கொள்ளுங்கள். மறுநாள் இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எங்கு எல்லாம் பல்லிகள் நடமாடும் இடமோ அங்கெல்லாம் ஸ்ப்ரே அடித்து விடுங்கள். குறிப்பாக சமயலறையில் மூளை முடுக்கில் எல்லாம் அடித்து விடுங்கள். இப்படி செய்தால் பல்லிகள் இந்த வாசனையை கண்டு பயந்து வீட்டை விட்டு வெளியேறி விடும்.
பல்லி எச்சம் குணமாக வீட்டு வைத்தியம்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |