நண்பர்களுடன் இரத்தத்தை பகிர்ந்து கொள்ளும் உயிரினம் எது..?

Advertisement

Which Creature Shares Blood With Friends in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இந்த உலகில் நாம் தெரிந்து கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் மறைந்திருக்கின்றன. அதை பற்றி நாம் ஒவ்வொரு நாளும் நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும்.

இவ்வுலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அதிலும் கண்ணுக்கே தெரியாத உயிரினங்கள் பல இருக்கின்றன. அப்படி இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினங்களும் பல சுவாரஸ்யங்களை கொண்டதாக இருக்கும். அப்படி இருக்கும் ஒரு உயிரினத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம். அதனால் இப்பதிவை முழுதாக படித்தறியவும்.

வாழ்நாள் முழுவதும் தூங்காத உயிரினம் எது தெரியுமா..

இரத்தத்தை பகிர்ந்து கொள்ளும் உயிரினம் எது..?

vampire bat in tamil

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் நண்பர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அதேபோல தான் மற்ற உயிரினங்களுக்கும். நமக்கு இருக்கும் உணர்வுகள் அவைகளுக்கும் இருக்கும். சரி அதெல்லாம் இருக்கட்டும், இப்போ எதற்கு நீங்கள் நண்பர்களை பற்றி பேசுகிறீர்கள் என்று யோசிப்பீர்கள்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பொதுவாக நண்பனாலே நல்லவன் தான் என்று படத்தில் சொல்லி கேட்டிருப்போம். அதை உண்மையாக்கிய ஒரு உயிரினத்தை பற்றி தான் கூறிக் கொண்டிருக்கின்றேன்.

அதாவது தன்னுடைய இரத்தத்தை தன் நண்பனுக்கு பகிர்ந்து கொள்ளும் உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கண்கள் இல்லாத உயிரினம் எது உங்களுக்கு தெரியுமா..

vampire bat in tamil

வௌவால் இனங்களில் ஓன்று தான் இந்த வாம்பயர் வெளவால்கள் (Vampire Bat). இவை தேடி உணவை உண்ண பிறகு, அதை மற்ற வௌவாலுக்கு பகிர்ந்து கொள்கிறது.

அதாவது, எடுத்துக்காட்டிற்கு சொல்லவேண்டும் என்றால், இப்போது ஒரு வாம்பயர் வெளவால் ஒரு மாட்டிடம் இருந்து இரத்தத்தை உறிஞ்சி எடுத்து கொள்கிறது. எடுத்த பின் அந்த இரத்தத்தை அதனுடன் இருக்கும் மற்ற வௌவாலுக்கு பகிர்ந்து கொடுக்கிறது. இப்படி தான் வாம்பயர் வெளவாலின் உணவு பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த அறிய தகவலை Berlin Museum of Natural History என்ற இடத்தில் நிபுணராக பணிபுரிந்த மிர்ஜாம் நார்ன்ஸ்சைல்ட் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா..?

வாம்பயர் வெளவால் பற்றிய சில தகவல்கள்: 

  • இவை குருதியுண்ணும் வௌவால்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மற்ற வௌவால்களை போல இவைகளும் பாலூட்டி இனங்களை சேர்ந்தவை.
  • குறும் கைச்சிறகுகள் வகையைச் சேர்ந்த வௌவால்கள் ஆகும்.
  • இந்த வௌவால்கள் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டுள்ளது.
  • இவை மனிதன் உட்பட பாலூட்டி விலங்குகளின் குருதியை உண்ணும் உயிரினமாக இருக்கிறது.
  • வௌவால்கள் இனத்திலேயே இந்த வௌவால்கள் மட்டும் தான் தாய்க்கு ஏதாவது நேர்ந்தால், அதன் குட்டியை மற்ற வௌவால்கள் கவனித்து பார்த்து கொள்ளும் பண்புகளை கொண்டுள்ளன.
  • இந்த வௌவால்களின் மிக பெரிய பண்பே, பிற வௌவால்கள் உணவு இல்லாமல் தவிக்கும் போது தன் உடம்பிலிருந்து சிறிதளவு இரத்தத்தினை மற்ற வௌவால்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கின்றன. 
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement