ஒருவரை ஏமாற்றினால் இதுதான் தண்டனையாம்..!

Advertisement

417 to 419 IPC in Tamil

இன்றைய சூழலில் அதிகரித்துள்ள குற்றங்களை குறைப்பதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்களின் சட்ட ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதே போல் தான் நமது இந்தியா நாட்டிலும் நடக்கும் அநீதிகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பற்றிய சரியான புரிதல் இருக்கின்றதா என்றால் நம்மில் பலருக்கும் கிடையாது.

அதனால் தான் உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் ஒவ்வொரு வகையான தண்டனை சட்ட பிரிவுகளின் விளக்கத்தினை பொதுநலம்.காம் பதிவில் கூறப்பட்டு வருகின்றன. அதே போல் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 417, 418 மற்றும் 419 பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சட்ட பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் அந்த குற்றங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

இந்திய தண்டனை சட்டம் 395 மற்றும் 396 பற்றிய தகவல்

417 IPC in Tamil:

இப்பொழுது ஒரு நபரிடம் உள்ள பொருட்கள் அல்லது செல்வங்களை அவரை மோசடி செய்து அவரிடம் இருந்து அபகரிப்பது குற்றம் ஆகும். இத்தகையை குற்றத்தை செய்யும் ஒரு நபருக்கு அல்லது ஒரு கூட்டத்திற்கு ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்கள்.

418 IPC in Tamil:

மோசடி தொடர்பான பரிவர்த்தனையில் ஆர்வமுள்ள ஒரு நபருக்கு தவறான நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிந்தும் ஏமாற்றுபவர் குற்றவாளி ஆவார். இத்தகையை குற்றத்தை செய்யும் ஒரு நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

419 IPC in Tamil:

தனிப்பட்ட முறையில் ஒரு நபரை அவரிடம் உள்ள சொத்துக்கள் மற்றும் பொருட்களை பறித்து கொண்டு மோசடி செய்வது குற்றம் ஆகும். இந்த குற்றத்தை செய்பவருக்கு மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

கொள்ளையடித்தால் இதுதான் தண்டனையாம்

 

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement