How to Stop Hair Fall Immediately at Home for Female in Tamil
முடி உதிர்வு பிரச்சனை என்பது பொதுவாக சில நாட்களில் சரியாக கூடிய பிரச்சனை தான். இருப்பினும் அது சாதரண முடி உதிர்வு பிரச்சனையாக இருக்க வேண்டும். பொதுவாக அனைவருக்குமே நாள் ஒன்று 50 முதல் 100 முடி உதிர்வது இயல்பான விஷம் தான். இருப்பினும் வழக்கத்தை விட அதிகமாக முடி உதிர்வது கவனிக்க வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது. முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. சாதாரணமான முடி உதிர்வு பிரச்சனை என்றால் அதனை நாம் எளிதாக குணப்படுத்திவிட முடியும். அதாவது இயற்கையான முறையில் அந்த பிரச்சனையை சரி செய்து முடி வளர்ச்சியை அதிகரித்துவிடலாம். அதற்கு நான் இந்த முறையை தான்முயற்சித்தேன், 1 மாதத்தில் என் முடியின் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகரித்தது.. நீங்களும் ட்ரை வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்..! சரி வாங்க அது என்ன முறை என்று இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள:
- கருஞ்சீரகம் – 1½ ஸ்பூன்
- வெந்தயம் – 1½ ஸ்பூன்
- கருவேப்பிலை – இரண்டு கொத்து
- இஞ்சி – இரண்டு துண்டுகள்
- தேங்காய் என்னை – 300 மில்லி
- வெந்தயம் 3 – பொடிதாக நறுக்கியது
- தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் ஒரே ஒரு ஸ்பூனால் உங்கள் வெள்ளை முடி கருமையாக மாறும்..!
How to Stop Hair Fall Immediately at Home in Tamil – செய்முறை:
ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கருஞ்சீரகம், வெந்தயம், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடிதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 300 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு அதனுடன் பொடி செய்து வைத்துள்ள கலவையை சேர்த்து 10 முதல் 15 நிமிடம் வரை கிளறவேண்டும். அதாவது எண்ணெயின் நிறம் பிரவுன் நிறத்திற்கு மாறும் வரை கிளறிவிடுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்து எண்ணெயை நன்றாக ஆறவிடவும். எண்ணெய் நன்கு ஆறியதும் வடிகட்டவும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து காச்சிய எண்ணெயை மீண்டும் சூடேற்றவும். எண்ணெய் சூடானதும் உரித்து வைத்துள்ள 10 சின்ன வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து அவற்றின் நிறம் பிரவுன் நிறமாக மாறும் வரை எண்ணெயை காய்ச்சவும்.
பின்பு அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்க வேண்டும். எண்ணெய் ஆறியதும் ஒரு பாட்டிலில் வைத்து ஒரு நாள் முழுவதும் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்.
பிறகு எப்பொழுதும் போல தலைக்கு கூந்தல் எண்ணெயாக தினமும் தடவி வரலாம்.
பயன்கள்:
- வெந்தயம் உடலுக்கு குளிச்சியளுக்கும், ஆக இந்த எண்ணெயை தலைக்கு தடவுவதன் மூலம் உடல் வெப்பம் குறையும். உடல் சூட்டினால் கொட்டும் முடியை வெந்தயம் தடுக்கிறது.
- கருஞ்சீரகம் நரைமுடி, செம்பட்டை போன்றவற்றை கருமையாக மாற்ற உதவி செய்கிறது.
- இஞ்சி தலைமுடியின் வேர் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவி செய்கிறது.
- கருவேப்பிலை மற்றும் வெங்காயம் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
செம்பருத்தி இலை ஒன்று போதும்..! எவ்வளவு நரை முடி இருந்தாலும் அதனை கருப்பாக மாற்ற..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |