உணவே மருந்து மருந்தே உணவு கவிதை
உணவு விருந்தினர் அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்றைய பதிவில் உணவு பற்றிய கவிதைகளை பற்றி பார்க்கப்போகிறோம். உணவு என்றால் சிலருக்கு கஷ்டம் சிலருக்கு இஷ்டம்..! சில மனிதர்கள் உணவின் மேல் கொண்ட விருப்பத்தினால் அவர்கள் சந்தோஷத்திலும் சாப்பிடுவார்கள், துக்கத்திலும் சாப்பிடுவார்கள், ஒரு சிலர் அழுகும் போதும் சாப்பிடுவார்கள். இந்த மாதிரியான மனிதர்கள் அவர்களுக்கு மிகவும் உணவுகளிடம் மட்டும் அவர்களுடைய உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்வார்கள். ஆகையால் அவர்கள் உணவின் மீது அவர்களுக்கு தனிப்பட்ட விருப்பம். அதனை தொடர்ந்து இன்று உணவுகளை பற்றிய கவிதையை பார்ப்போம் வாங்க.!
Food Quotes in Tamil:
இன்னநாளில் என்னதின்ன ஏற்றதென்றும் தேரையர்
சொன்னார் புரியா துனக்கின்னும் — அன்றே
உருக்கிய நெய்பெருக்கு மோர்நீரைச் சேர்த்து
பருகு யெனவுரைத்தார் பாரு
என்ன பதார்த்தம் என்னகுணம் அதை எப்படிச் சாப்பிடுவது என்று தேரையர் கூறியிருக்கிறார். நெய்யை உருக்கியும் மோரில் தண்ணீர் அதிகம் சேர்த்து பருக வியாதி வராதாம்
Food Kavithai in Tamil:
இல்லாதது
இல்லாதவன் பிரச்சனை;
இருப்பது
இருப்பவன் பிரச்சனை;
இருசாராருமே ஓடுவார்கள்;
இருப்பவன் – தொந்தியைக் குறைக்க,
இல்லாதவனோ அதை நிறைக்க…!
பானிபூரிய போடி கூட விடாம கல்பா அடிச்சு
வெட்டிக்கதை பேசிக்கினே கடலை போட்டு
ஆட்சி புடிச்சி பேசார பஜ்ஜிய துன்னு
மெர்சலா மசால் வடைய கொதறி
சமோசாலை பட்டாணிய பீதிக்கு எடுத்து
தானிய குடிச்சு பவுத்த ரொப்புனாலு
எனதா நாஸ்தா இங்க கெடந்தாலு
மதுர பரோட்டா குருமா
மனமனக்கு பிரியாணி போல வருமா.!
பாரம்பரிய உணவு கவிதைகள்:
பார்த்தால் பிடிக்குதோ இல்லையோ பசி எடுக்குது

Funny Food Quotes in Tamil:
உன்னை வெட்டும் போது
இருக்கும் கஷ்டம்
உன்னை ருசிக்கும்
போது மருந்தாகிறது

funny food quotes in tamil:
வாரம் தோறும்
கனவில் வந்து தொல்லை
தருகிறாய்
மறுநாள் என் கையில்
விருந்தாகிறாய்

funny food quotes in tamil:
என் மேல் பிரியமாக
இல்லையேற்றாலும் பரவாயில்லை
ஆனால் ஞாயிற்றுக்கிழமை
பிரியாணியாக மறுக்காதே

உண்ணும் உணவுக்கும்
உணர்வுகள் உண்டு.
பசிக்கு மட்டுமல்ல;
ருசிக்கும் உணவு அவசியம்.
கடுமையான பணிகளையும்
களைப்பின்றி செயது முடிக்க
உண்ணுகின்ற உணவு
தரமானதாக இருக்க வேண்டும்.
காலை உணவு களைப்பைப் போக்கும்.
மந்தம் இல்லாமல் இருக்க
மதிய உணவு அவசியம் தேவை.
ஆக உணவுதான் நமக்கு மருந்து.
மருந்துதான் நமது உணவு.
சாதமும் பருப்பு சாம்பாரும்
நெய்யுடன் கலந்து உண்டால்
சுவையோ சுவை!!!
கறியும் கூட்டும்
தொட்டுக்கொள்ள ருசிக்கும்.
நார் சத்துக்கு கீரை போதும்.
மோரும் சாதமும்
மோட்சத்தை அருகே கொண்டு வரும்.
ஊறுகாயும் அப்பளமும்
சுவைக்கு சுவை சேர்க்கும்,.
நலமாய் வாழ நல்லதை உண்போம்
வளமாய் வாழ வெந்ததை உண்போம்.
Short Food Quotes in Tamil:
உண்ணும் உணவை வீண் செய்யாமல் இருப்பதே நாம் செய்யும் முதல் அன்னதானம்

Sapadu Quotes in Tamil:
உணவு கிடைப்பவர்களுக்கு அலட்சியமாக தெரிகிறது, கிடைக்காதவர்களுக்கு பொக்கிஷமாக தெரிகிறது

நகைச்சுவை பிறந்தநாள் வாழ்த்துக்கள்
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |














