Andhra Style Peanut Chutney Recipe
பொதுவாக இட்டலி, தோசை என்றால் அதற்கு சைடிஷ் ஆக சாப்பிடுவது சட்னி, சாம்பார், பொடி தான். பெரும்பாலான வீட்டில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி போன்றவை தான் செய்கிறார்கள். இது போல ஒரே மாதிரியாக சட்னி செய்து சாப்பிட்டால் போர் தான் அடிக்கும்.
சட்னிகளை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியாக வைப்பார்கள். ஏன் சொல்லப்போனால் நம் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களே வேறு மாதிரியாக வைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
வேர்க்கடலை சட்னி செய்முறை
Ingredients
- வேர்க்கடலை- 50
- வெங்காயம்-1
- பூண்டு- 5 பற்கள்
- இஞ்சி- சிறிய துண்டு
- கடுகு- 1/2 தேக்கரண்டி
- சீரகம்- 1/2 தேக்கரண்டி
- உளுத்தப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை- சிறிதளவு
- எண்ணெய்-3 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய்- 4
Instructions
வேர்க்கடலை சட்னி செய்முறை
வேர்க்கடலை சட்னி செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணைய் ஊற்ற வேண்டும். பின் அதில் வேர்க்கடலை சேர்த்து சிவந்த நிறம் வரும் வரைக்கும் வதக்க வேண்டும்,. முக்கியமாக அடுப்பை குறைந்த தீயிலே வைத்து வதக்க வேண்டும், ஏனென்றால் அடுப்பை வேகமாக வைத்து வதக்கினால் தீஞ்சு விடும்.
அடுத்து அதே கடாயில் காய்ந்த மிளகாய் 4, நறுக்கிய இஞ்சி சிறிதளவு, பூண்டு நறுக்கியது சிறிதளவு சேர்த்து வதக்க வேண்டும்,வெங்காயமானது சுருங்கி சிவந்த நிறம் வரும் வரைக்கும் வதக்க வேண்டும். இதனை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும் மிக்ஸ் ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த சட்னியை தாளிப்பதற்கு அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை, உளுத்தப்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும். இதனை அரைத்து வைத்த சட்னியில் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான ஆந்திரா ஸ்டைல் சட்னி ரெடி.! சுவைத்து பாருங்க..
ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை சட்னி ஒரு முறை செய்து பாருங்க..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |