குக்கரில் புளியோதரை செய்யலாம் அது எப்படி தெரியுமா? செய்முறை விளக்கம் இங்கு..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக சைவப்பிரியராக இருந்தாலும் சரி, அசைவ பிரியராக இருந்தாலும் சரி இருவருக்குமே மிகவும் பிடிக்கும் சில உணவுகள் உள்ளது. அவற்றில் ஓன்று தான் இந்த புளியோதரை. புளியோதரை என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள், அதனுடைய சுவை அப்படி இருக்கும்.
சிலர் மூன்று வேளையும் புளிசாதம் கொடுத்தாலும் அதனை வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். என்ன தான் வீட்டில் செய்யும் புளியோதரையை விட கோயில்களில் கொடுக்கும் புளியோதரியின் சுவை வேற லெவலில் இருக்கும். அனைவரும் பிடிக்கும் இந்த புளியோதரையை நாம் கொஞ்சம் வித்தியாசமான முறையில் குக்கரில் செய்ய போகிறோம். அது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உடனடி புளி சாதம் குக்கரில் செய்வது எப்படி?
Ingredients
- சமையல் எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்
- உளுத்தப்பருப்பு - ஒரு ஸ்பூன்
- பெருங்காயம் தூள் - ¼ ஸ்பூன்
- கருவேப்பிலை - இரண்டு கொத்து
- வரமிளகாய் - 5
- பூண்டு - ஒரு கையளவு
- வெள்ளை எள்ளு - ஒரு ஸ்பூன்
- வெந்தயம் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- அரிசி - மூன்று கப்
- புளி - 100 கிராம்
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
Instructions
இன்ஸ்டன்ட் புளியோதரை செய்முறை:
- முதலில் ஒரு பொடி தயார் செய்து கொள்வோம் அதற்கு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் ஒரு ஸ்பூன் வெள்ளை எள்ளு, சிறிதளவு வெந்தயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த பொருளை பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- பின் அதனுடன் ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- பிறகு ஐந்து வரமிளகையை இரண்டாக உடைத்து சேர்த்து கொள்ளுஙங்கள்.
- உரித்த பூண்டு ஒரு கைப்பிடி அளவு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
- பிறகு புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
- அரிசிக்கு தகுந்தது போல் தண்ணீர் மற்றும் புளி கரைசல், இரண்டையும் சேர்த்து சரியான அளவில் அளந்துகொள்ளுங்கள். அதாவது மூன்று கப் அரிசிக்கு ஆறு கப் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள்.
- இப்பொழுது அளந்து வைத்துள்ள தண்ணீரை குக்கரில் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- தண்ணீர் நன்கு கொத்தி வந்ததும் அரிசியை சேர்க்க வேண்டும், அரிசி சேர்த்த பிறகு மீண்டும் ஒரு பத்து நிமிடம் நன்றாக கிளறிவிட்டு கொதிக்க விடவும், அரிசி சேர்த்த 10 நிமிடம் கழித்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறிவிடுங்கள்.
- பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறங்கினால் சுவையான மற்றும் எளிமையான புளிசாதம் தயார்.கண்டிப்பாக இந்த முறையை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கத்தரிக்காயில் சாதம் செய்யலாம் எப்படின்னு தெரியுமா.?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |