காஷ்மீரி மட்டன் புலாவ்
பொதுவாக அசைவ உணவுகள் என்றாலே நமக்கு மிகவும் விருப்பமான உணவாக இருப்பது மட்டனாகத்தான் இருக்கும். மட்டனில் புது வகை உணவு வகைகள் செய்தலும். நமக்கு இன்னும் புதிய வகை உணகளை தயாரிக்க தோன்றும். அப்படி ஒரு புதிய வகையாக மட்டனில் புலாவ் செய்யலாம். புலாவ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். பல வகையான புலாவ் ரெசிபிகள் உள்ளன. அதில் ஒன்றான காஷ்மீரி மட்டன் புலாவ் சுவை மற்ற வகை உணவுவகைகளை விட புதுமையாக இருக்கும்.
இன்றைய பதிவில் காஷ்மீரி மட்டன் புலாவ் செய்முறை விளக்கத்தை காண்போம். இந்த காஷ்மீரி மட்டன் புலாவினை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். எனவே காஷ்மீரி மட்டன் புலாவ் சுவையாக செய்வது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
காஷ்மீரி மட்டன் புலாவ்
Ingredients
- ஆட்டு இறைச்சி - 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் -4
- பூண்டு - 7பல்
- தண்ணீர்
- சோம்பு - 3டீஸ்பூன்
- ஏலக்காய் -10
- கிராம்பு -5
- மிளகு
- ஜாதிபத்திரி
- உப்பு
- பாசுமதி அரிசி -1/2 கிலோ
- சீரகம் -2 டீஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 3
- இஞ்சி பூண்டு விழுது - 1டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 8
- தயிர்
- நெய்
- துருவிய தேங்காய்
- பாதம் -10 (ஊற வைத்தது)
- முந்திரி -10
- உலர் திராட்சை -20
- எண்ணெய்
Instructions
முதலில் அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு இறைச்சியை சேர்த்து அத்துடன் வெங்காயம், பூண்டு, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, மிளகு, ஜாதிபத்திரி தேவையான அளவு உப்பு சேர்த்து மட்டன் சாறு தயாரிப்பதற்காக அனைத்தையும் நனறாக வேக வைக்கவும்.
இவை 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின்னர் அடுப்பை அனைத்து விட்டு இறைச்சிகளை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது மற்றோரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஏலக்காய், சீரகம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் இறைச்சிகளை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். அதனுடன் இலவங்கப்பட்டை, இஞ்சி, பூண்டு விழுது, தயிர், பச்சை மிளகாய் சேர்த்து 10 நன்றாக வதக்கவும். பின்னர் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும். அத்துடன் முதலில் தயாரித்து வைத்துள்ள சாறு தேவையான அளவு உப்பு 10 நிமிடம் வரை மூடிவைத்து வேகவைக்கவும்.
10 நிமிடங்களுக்கு பின்னர் பொரித்த வெங்காயம், சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
பின்னர் மற்றோரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெயை சூடாக்கி பாதம், தேங்காய், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதை தயாராகி கொண்டு இருக்கும் கலவையில் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் குறைவான தீயில் வேக வைக்கவும்.
இப்போது சுவையான காஷ்மீரி மட்டன் புலாவ் தயார்.
மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
புதினா புலாவ் செய்முறை..! உங்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கும்..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |