மரப்பாச்சி பொம்மை எந்த மரத்தால் செய்யப்பட்டது
நம் முன்னோர்கள் காலத்தில் விளையாட்டு பொருளாக இருந்தது மரப்பாச்சி பொம்மை தான். ஆனால் இந்த மரப்பாச்சி பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுவதை பார்க்க முடிவதில்லை. மேலும் கடைகளில் விற்கிறதா என்னவென்று கூட தெரியவில்லை. நம் முன்னோர்கள் செய்கின்ற செயலானது எந்த விஷயத்திலும் ஒவ்வொரு பயன் இல்லாமல் செய்யமாட்டார்கள். அது போல தான் மரப்பாச்சி பொம்மைகளும். மரப்பாச்சி பொம்மைகள் எதனால் செய்யப்பட்டது, அதிலுள்ள நன்மைகள் போன்றவற்றை அறிந்து கொள்வோம்.
மரப்பாச்சி பொம்மை எதனால் செய்யப்பட்டது:
இந்த மரப்பாச்சி பொம்மையானது ஊசியிலை, தேக்கு, கருங்காலி, செம்மரம், செஞ்சந்தனம் போன்ற மரங்களில் செய்யப்பட்டது.
குழந்தைகளுக்கு விளையாட கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
குழந்தைகள் விளையாடுவதற்கு மரப்பாச்சி பொம்மைகளை கொடுப்பார்கள். ஏனென்றால் பிளாஸ்டிக் பொருட்களை விளையாட கொடுத்தால் அதை வாயில் வாய்த்து கடிக்கும். பிளாஸ்டிக்கை வாயில் கடிப்பதால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆனால் மரப்பாச்சி பொம்மைகள் நன்மையை மட்டும் கொடுக்கும்.
மேலும் குழந்தைகளுக்கு சளி பிடித்தால் மரப்பாச்சி பொம்மையை அம்மியில் வைத்து இழைப்பார்கள். இதனை தாய்ப்பாலில் சேர்த்து கலந்து விட்டு நெற்றியில் பத்து போட்டால் சளி பிரச்சனை சரியாகிவிடும்.
ஏன் ரயில்வே ஸ்டேஷன் போர்டு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா..?
குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளை வாயில் வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
திருமானவர்களுக்கு மரப்பாச்சி பொம்மை பரிசு:
நம் முன்னோர்களின் காலத்தில் மரப்பாச்சி பொம்மைகளை புதிதாக திருமானவர்களுக்கு பரிசாக கொடுப்பார்கள். இரண்டு மரப்பாச்சி பொம்மைகளாக கொடுப்பார்கள். ஆண் மரப்பாச்சி, பெண் மரப்பாச்சி என இரண்டு கொடுப்பார்கள். இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறகு இதை வைத்து விளையாடுவார்கள் என்று நினைத்து கொடுப்பார்கள்.
கேஸ் சிலிண்டரில் இந்த நம்பரை செக் பண்ணிட்டு வாங்குங்க..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |