Reason For Salivation On The Tongue After Seeing Sour Food in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகின்றோம். பொதுவாக நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதுபோன்ற ஆசை உங்களுக்கும் இருக்கிறதா..? அப்போ உங்களுக்கு எங்கள் பொதுநலம் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
சரி உங்களுக்கு புளிப்பான உணவுகள் என்றால் பிடிக்குமா..? அதாவது புளியங்காய், ஊறுகாய், எலுமிச்சை பழம், மாங்காய் இதுபோன்ற புளிப்பான உணவுகள் உங்களுக்கு பிடிக்குமா..? ஏன் கேட்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். ஏனென்றால் நீங்கள் மேல் இருக்கும் Title -ஐ படித்திருப்பீர்கள். சரி நாம் புளிப்பான உணவுகளை பார்த்தால் ஏன் நாக்கில் எச்சில் சுரக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை படித்தறியலாம் வாங்க.
கை முட்டியில் அடிபட்டால் ஏன் ஷாக் அடிக்குதுனு உங்களுக்கு தெரியுமா
புளிப்பு உணவுகளை பார்த்தவுடன் நாக்கில் எச்சில் சுரக்க காரணம் என்ன..?
பொதுவாக நாம் அனைவருமே புளிப்பான உணவுகளை சாப்பிட்டு இருப்போம். மேலும் நம்மில் பலருக்கும் புளிப்பான உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதாவது மாங்காய், புளியங்காய், நெல்லிக்காய், ஊறுகாய், எலுமிச்சைப்பழம் இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம்.
சிலருக்கு புளிப்பு புடிக்காது. ஆனால் பலரும் சில உணவுகள் எவ்வளவு புளிப்பாக இருந்தாலும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி புளிப்பான உணவுகளை சாப்பிடும் போது வாயில் எச்சில் ஊறினால் பரவாயில்லை.
ஆனால் புளிப்பான உணவுகளை பார்த்தாலே நமக்கு நாக்கில் எச்சில் ஊரும். அவ்வளவு ஏன் சிலருக்கு புளிப்பான உணவுகளை பற்றி நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊரும்.
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது அழுமாம்.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா
இதுபோல உங்களுக்கும் நடந்திருக்கிறதா..? இப்படி கேட்பது தவறு என்று நினைக்கிறேன். ஏனென்றால், இதுபோல நம் அனைவருக்குமே நடந்திருக்கும்.
அப்படி நடக்கும் போது ஏன் இப்படி எச்சில் சுரக்கிறது என்று என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
புளிப்புச் சுவையானது பரோடிட் சுரப்பி (Parotid Gland) உற்பத்தியைத் தூண்டுகிறது. இது செரிமான செயல்முறையைத் தொடங்குவதற்காக உமிழ்நீரை உருவாக்குகிறது.
இந்த Parotid Gland சுரப்பியானது உங்கள் காதுகளில் இருந்து உங்கள் தாடை வரை நீண்டுள்ளது. இது திரவம் வாயில் சுரக்கும் போது நீங்கள் உமிழ்நீரை உணர்கிறீர்கள். மூளையும் சுவை உணர்வும் நெருக்கமாக இணைந்திருப்பதால் இது நிகழ்கிறது.
இதனால் வாசனை மற்றும் காட்சி தூண்டுதல்கள் மூளைக்கு அனுப்பப்படுகின்றன. அதை மூளை உமிழ்நீரை சுரக்க உமிழ்நீர் சுரப்பிகளுக்கு வேலை கொடுக்கிறது. இப்படி நடக்கும் முறைக்கு அனிச்சை செயல் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |