மூளையை சுறு சுறுப்பாக வைத்து கொள்ள உதவும் விடுகதைகள்…!

Advertisement

Vidukathai with Answer in Tamil

நமது முன்னோர்களின் காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தபோது குழந்தைகள் பெரும்பாலும் தாத்தா,பாட்டியிடமே வளர்ந்தார்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் தாத்தா, பாட்டியிடம் கதைகள் கேட்பதே பெரிய பொழுதுபோக்கு. அதாவது அவர்கள் அறிவு வளரும் கதைகள், கற்பனை வளரும் கதைகள் என பலவிதமான கதைகளை கூறுவார்கள். அதில் ஒன்று தான் விடுகதைகள் கேட்பது. இது குழந்தைகளின் அறிவாற்றலை வளர்ப்பதுடன், கூர்ந்து சிந்திக்கும் மனப்பாங்கை வளர்க்க உதவுகின்றது. இதனால் மனம் ஒருங்கிணைப்பு கிடைத்து எதையும் கூர்ந்து செய்யும் ஆற்றல் பெறுவார்கள். அப்படிப்பட்ட சில விடுகதைகளை தான் இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து உங்களின் சிந்திக்கும் திறனை அதிகரித்து கொள்ளுங்கள்.

புதிர் விடுகதைகள்:

  1. அடிகளை வாங்கி நம்மை ஆட வைப்பான் அவன் யார்.?

விடை: பறை

2. திட்டி திட்டி தீயில் போட்டாலும், அள்ளி அள்ளி அனலில் போட்டாலும், வாரி வாரி வாசம் தருவான் மனம் குளிர நறுமணம் தருவான் அவன் யார்.?

விடை: சாம்பிராணி

3. அச்சில்லா சக்கரம், அசைந்தாடும் சக்கரம், அணிந்தால் அழகாகும் பெண்ணின் கரம் அது என்ன.?

விடை: வளையல்

4. உன் அறிவுக்கும் பொருளாவேன், இரவின் அழகுக்கும் துணையாவேன், நான் யார்.?

விடை: மதி(நிலவு)

5. காலில்லாமல் ஓடுவான் அவன் யார்.?

விடை: பாம்பு

6. ஆயிரம் பேர் கட்டிய, அழகு மண்டபம் ஒருவர் கண்பட்டு, உருக்குலைந்து போனதாம் அது என்ன.?

விடை: தேன்கூடு

7. தொடமுடியாத உயரத்தில் தொடர்ந்து வரும் ராணி;பகலில் வெளிவராத தேனி அவள் யார்.?

விடை: நிலவு

8. ஒன்றினுள் அடைக்க முடியும் ஆனால் அல்ல முடியாது;உணர முடியும்,ஆனால் உருவம் இல்லாதது.அது யார்.?

விடை: காற்று

9. ஒரு கால் மனிதனுக்கு உடலெல்லாம் கைகள்.அவன் யார்.?
விடை: மரம்
10.உடல் முழுதும் ஓட்டைகளை கொண்டவன்;ஆனாலும் தண்ணீரை சேர்த்து வைப்பவன் அவன் யார்.?
விடை:ஸ்பான்ச்(sponge)
11.நாம் சாப்பிடுவதற்காக வாங்கும் ஒரு பொருளை கடைசி வரை சாப்பிட முடியாது அது என்ன.?
விடை: தட்டு
12. இளமையில் உயரமாகவும் முதுமையில் குள்ளமாகவும் மாறுபவன் யார்.?
விடை: மெழுகுவர்த்தி
13. எத்தனை மாதங்கள் 28 நாட்களை கொண்டுள்ளன.?
விடை: எல்லா மாதங்களும்
14. உள்ளே செல்வதற்கு எளிதாகவும் வெளியே வருவதற்கு கடினமாகவும் இருக்கும் அது என்ன.?
விடை: பிரட்சனைகள்
15. முள் இருந்தும் குத்தாதவன் யார்.?
விடை: கடிகாரம்
16.உங்களுக்கு சொந்தமான ஒன்றை மற்றவர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் அது என்ன.?
விடை: உங்கள் பெயர்
17. சுலபமாக உடைக்க கூடிய ஒன்று ஆனால் உங்களால் அதை தொடமுடியாது அது என்ன.?
விடை: நீங்கள் செய்யும் சத்தியங்கள்
18. ஒரே கேள்வியை எத்தனை முறை கேட்டாலும் வெவ்வேறு பதில்கள் வரும் ஆனால் அந்த எல்லா பதில்களும் சரியானதாக இருக்கும்.அந்த கேள்வி என்ன.?
விடை: time என்ன?
19. நீங்கள் சாப்பிட கூடிய நிறம் (colour) என்ன.?
விடை:ஆரஞ்சு 🍊
20. ஒரு அறையின் அனைத்து இடங்களையும் இதனால் நிரப்ப முடியும் ஆனால் எந்த இடத்தையும் ஆக்கிரமித்து கொள்ளாது அது என்ன.?
விடை: ஒளி
21.எட்டுக் கை குள்ளனுக்கு ஒற்றை கால் அவன் யார்.?
விடை: குடை
22. எல்லோரும் ஓய்வெடுத்தாலும் ஓய்வெடுக்காதவன் யார்.?
விடை: கடிகாரம்
23. ஒற்றைக்கால் ஆட்டக்காரன், ஒய்யார ஆட்டக்காரன், ஓயும் போது மண் சேருவான்
அவன் யார்?
விடை: பம்பரம்
24. பகலிலெ நீல நிற சாலை, இரவிலே மஞ்சள் நிற சோலை, அது என்ன.?
விடை: வானம்
25. நடுங்க வைப்பான் அனைவரையும் அடங்கி போவான் அனலிடம் அது என்ன.?
விடை: குளிர்
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 
Advertisement