Remove Dark Spots
பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் முகத்தில் பருக்கள் வருவது தான். முகத்தில் பருக்கள் வருவதையே பெண்களால் தாங்கி கொள்ள முடியாது. அந்த பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. இந்த பருக்களையும் கரும்புள்ளிகளையும் போக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட சோப்புகள் மற்றும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் சருமத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று இயற்கையான முறையில் கரும்புள்ளிகளை மறைய செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பருக்கள் வர காரணம் என்ன..?
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். இருந்தாலும் நாம் செய்யும் சில தவறுகளாலும் முகத்தில் பருக்கள் வருகிறது.
நாம் எண்ணெய் பொருட்கள் அதிகமாக உட்கொண்டால் முகத்தில் பருக்கள் வரும் என்று சொல்வார்கள். அதுபோல நாம் ஒரே சோப்பை தான் பயன்படுத்த வேண்டும். வேறு வேறு சோப்பு பயன்படுத்தினாலும் முகத்தில் பருக்கள் வரும்.
மேலும் பருக்கள் வந்தால் அதை நாம் கிள்ளிவிடாமல் இருக்க வேண்டும். கிள்ளிவிடுவதால் தான் அது கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. சரி வாங்க கரும்புள்ளிகளை மறைய வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
3 நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..! |
Remove Dark Spots On Face Home Remedies in Tamil:
- முல்தானி மெட்டி – 2 டேபிள் ஸ்பூன்
- தக்காளி சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
முதலில் ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின் தக்காளியை பிழிந்து அதில் இருந்து எடுக்கப்பட்ட சாறில் இருந்து 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு இதில் சேர்க்க வேண்டும். பிறகு இதில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.
தக்காளியில் இருக்கும் சத்துக்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மேலும் தக்காளி முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் முக கருமையை போக்க உதவி செய்கிறது. தயிர் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. முல்தானி மெட்டி முகத்தில் கரும்புள்ளிகளை நீக்கி பருக்கள் வராமல் தடுக்கிறது.இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் அப்படியே வைத்து கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.
இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும். ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் 2 நாட்களில் மறைய இதை தடவுங்கள்..! |
இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |