Best Summer House Cooling Tips in Tamil
கோடைக்காலம் ஏன்டா வருது என்று தான் நினைப்பார்கள். பகல் இல்லாமல் இரவே இருக்க கூடாத என்று நினைப்பார்கள். அதுவும் வேலை விட்டு வெளியில் வந்தாலே என்னடா வெயில் இப்படி இருக்கிறதே என்று நினைப்பார்கள். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கமானது அதிகமாக இருக்கும். இந்த வெயிலை சமாளிப்பதற்கான வழிகள் ஏதும் இருக்கிறதா என்று தான் தேடி கொண்டே இருப்பார்கள்.
சில பேர் வேலையிடத்தில் வெயில் தெரியாது, வீட்டிற்கு வந்தது பிறகு அப்படி வேர்க்கும். நம்ம வீடு தான் இப்படி இருக்கிறதா என்று நினைப்பார்கள். அப்படி நீங்களும் இந்த கோடை காலத்தில் வீட்டை குளுமையாக வைத்து கொள்வது எப்படி என்று அறிந்து அறிந்து கொள்வோம் வாங்க.
துணிகளை காய வைப்பது:
மழைக்காலத்தில் துணிகளை வீட்டிற்குள் தான் காய வைப்போம். அதே போல இந்த கோடைகாலத்திலும் துணிகளை வீட்டிற்குள்ளயே காய வைப்பதன் மூலம் வீடு ஆனது குளுமையாக இருக்கும்.
ஜன்னல்:
காலை மற்றும் மாலை நேரங்களில் ஜன்னலை திறந்து வைத்தால் வீடு குளுமையாக இருக்கும். அதுவே மதிய வேலையில் ஜன்னல் பகுதியிலிருந்து வரும் காற்று ஆனது அனலாக இருக்கும். இதனை தடுப்பதற்கு ஒரு துணியை நனைத்து ஜன்னல் பகுதியில் போட வேண்டும். இதன் மூலம் இதிலிருந்து வரும் காற்று ஆனது குளிர்ச்சியாக இருக்கும்.
மொட்டை மாடி:
மொட்டை மாடியில் மாலை நேரத்தில் தண்ணீரை ஊற்றி விடுங்கள். அப்படி இல்லையென்றால் கருப்பு சாக்கை எடுத்து மொட்டை மாடியில் போட்டு கொள்ள வேண்டும். இதன் மேலே தண்ணீர் ஊற்ற வேண்டும். இந்த கருப்பு சாக்கில் தண்ணீர் இருக்கும் வரை வீட்டின் உள்பக்கம் குளுமையாக இருக்கும்.
பேன்:
இந்த கோடைகாலத்தில் பேன் போடாமல் இருக்க முடியாது, ஒரு பெண் இல்லை இரண்டு பேனை போட்டு தான் தூங்குவார்கள். இப்படி நீங்கள் இரண்டு பேன் போட்டு தூங்குவதால் வெப்பம் வெளியேறாமல் உட்பகுதியில் தான் இருக்கும். அதனால் டேபிள் பேனை மட்டும் போட்டு தூங்குங்கள்.
பொருட்களை குறைப்பது:
வீட்டில் பொருட்களை அடைத்து வைப்பதிருப்பதை தவிர்க்க வேண்டும். இப்படி அடைத்து வைத்திருப்பதால் காற்று வராது. அதனால் வீடு மற்றும் ரூம் அறையை சுத்தமாக வைத்து கொள்வது அவசியமானதாகும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |