வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆவாரம் பூ நன்மைகள்.! | Avarampoo Benefits Tamil

Updated On: September 19, 2025 5:07 PM
Follow Us:
Avaram poo Health Benefits
---Advertisement---
Advertisement

Aavaram Poo Benefits in Tamil

ஆவாரம் பூ (Avaram poo Health Benefits in Tamil) என்றால் கடவுளுக்கு பூஜைக்கு படைக்கும் பூவாக தான் நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம். ஆவாரம்பூவை பெண்கள் விரும்பி தலையில் சூடுவதும் இல்லை. ஆனால், இயற்கையாக இதை பூவாக கண்டாலும், இது ஒரு மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ள ஓர் அருமருந்து என்று தான் கூற வேண்டும்.

தலை முடி வளருவதில் இருந்தும் நீரழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள் என பல ஆரோக்கிய நன்மைகள் பெற ஆவாரம் பூ உதவுகிறது. சரி இப்போது அற்புதம் நிறைந்த இந்த ஆவாரம் பூ மருத்துவ குறிப்பை பற்றி படித்தறிவோம் வாங்க..!

ஆயுள் இரட்டிப்பாகுமாம் இந்த ஆவாரம் பூ டீ குடித்தால் – அதன் செய்முறை..!

ஆவார பூ நன்மைகள் | Aavaram Poo Nanmaigal:

ஆவார பூ நன்மைகள்

  • ஆவார பூவில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருப்பதால் இதய பிரச்சனை, புற்றுநோய் பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்கிறது.
  • தலை முடியில் பொடுகு பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்கிறது. மேலும் தலை முடியையும் வளர செய்கிறது.
  • செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஆவார பூ உதவுகிறது. செரிமான பிரச்சனை இருந்தால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படும். இந்த பிரச்சனைக்கு ஆவார பூ உதவுகிறது.
  • இந்த பூவில் பாக்ட்ரியா எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. அதனால் உடலில் தோல் சம்மந்தப்ட்ட பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு ஆவார பூ உதவியாக இருக்கிறது.
  • ஆவார பூவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பண்பு இருக்கிறது. மேலும் எந்த பிரச்சனையும் ஏற்படாமலும் நம்மை பாதுகாத்து கொள்கிறது.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஆவார பூ சிறந்த மருந்தாக இருக்கிறது.

காய்ச்சலை குணப்படுத்தும் ஆவாரம் பூ:

உடலில் காய்ச்சல் ஏற்படுவது ஏதாவது நுண்ணுயிரி தொற்றுக்களின் மூலமே வருகிறது. நமது உடலில் எப்படிப்பட்ட காய்ச்சல் இருந்தாலும் ஆவாரம் பூவினை போட்டு வேகவைத்த நீரில் காய்ச்சல் நேரத்தில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடல் காய்ச்சல் விரைவில் நீங்கிவிடும்.

கூந்தல் நன்கு வளர ஆவாரம் பூ:

ஆவாரம்பூ பயன்கள் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம்.

ஆவாரம் பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Aavaram Poo Nanmaigal

முடி உதிர்வு பிரச்சனைக்கு ஆவாரம் பூ:

வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் நம்மை தாக்காது.

கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் இந்த ஆவாரம் பூ.

எனவே முடி உதிர்வு பிரச்சனை கூந்தலில் ஆவாரம் பூவை வைத்து கொண்டால் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனை, உடனே சரியாகும்.

கூந்தல் நன்கு வளர ஆவாரம் பூ:

ஃப்ரெஷ் ஆவாரம் பூ , செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள்.

உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

முகத்தை தங்கம் போல் வைத்திருக்கும் ஆவாரம்பூ அழகு குறிப்புகள்..!

தலை முடி பளபளக்க:

ஆவாரம் பூ பயன்கள் – ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள்.

தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி மினுமினுப்பாகவும், பளபளப்பாகும்.

உஷ்ணத்தினால் ஏற்படும் கண் நோய்களுக்கு:

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்.

ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

மூலம் குணமாக ஆவாரம் பூ:

ஆவாரம் பூ கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

உடல் வலிமை பெற:

ஆவாரம் பூ பயன்கள் அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.

ஆவாரம்பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்:

 ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு ஆவாரம் பூ சிறந்த தீர்வினை வழங்குகிறது:

அசோகமட்டை, மருதம்பட்டை, ஆவாரம் பூ , திரிகடுகு பொடி, திரிபலா பொடி அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி உடனே சரியாகிவிடும்.

நீரிழிவு பிரச்சனைக்கு:

நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் ஆவாரம்பூ சாறு எடுத்து கொள்வதன் மூலம் நல்ல பலனை அளிக்கும். இந்த பூவை பொடி செய்து பனகற்கண்டு மற்றும் தேன் கலந்து வாரம் இருமுறை  குடித்துவந்தால் நீரிழிவு பிரச்சனை குணமாகும்.

சிறுநீர் பிரச்சனைக்கு:

சிறுநீர் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆவாரம் பூ சாறை குடிக்கும் போது சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனை குணமாகும். இதில் இருக்கும் டையூரிட்டிக் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க செய்கிறது.

உடல் எடையை  குறைக்க:

ஆவாரம் பூ சாறு உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எந்த பக்க விளைவும் இல்லாமல் ஆவாரம் பூ சாரை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.

புற்றுநோய் :

ஆவாரம் பூ இலை சாறு மார்பக புற்றுநோய் மற்றும் குரல்வளை புற்றுநோய் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now