நீங்க வெளியில் சென்றாலே எல்லாரும் உங்கள பாத்து முகம் இவ்வளவு பொலிவா இருக்கே எப்படின்னு கேட்கணுமா..!

Advertisement

Face Glowing Tips in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் அழகை பராமரித்து கொள்ள வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். ஆனால் அதற்கான நேரமும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு அமையாது. அதாவது இன்றைய அவசர உலகில் நமது அன்றாட வேலைகளை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கின்றது. இப்படி இருக்கும் பொழுது நமது அழகினை பராமரித்து கொள்வதற்கென்று எங்கு நாம் நேரம் ஒதுக்குவது. ஆனாலும் நமது மனம் அவ்வப்பொழுது நமது அழகை பராமரித்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு எளிமையான மற்றும் பயனுள்ள சில அழகு குறிப்புகளை பதிவிட்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவிலும் இயற்கையான மற்றும் எளிமையான முறையில் உங்க வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு உங்க முகத்தை நன்கு பொலிவு பெற செய்வது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Face Brightness Tips in Tamil:

Face Brightness Tips in Tamil

இயற்கையான முறையில் உங்க வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு உங்க முகத்தை நன்கு பொலிவு பெற செய்வது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

அந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்ளவோம் வாங்க.

  1. மைசூர் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் 
  2. ரோஸ் வாட்டர் – 4 டேபிள் ஸ்பூன் 
  3. கிளிசரின் – 2 டேபிள் ஸ்பூன்
  4. வைட்டமின் E கேப்சூல் – 3
  5. தண்ணீர் – தேவையான அளவு 

கோடை காலத்திலும் உங்களின் சருமம் பொலிவுடன் காட்சியளிக்க அரிசி தண்ணீரை இப்படி பயன்படுத்துங்க போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு ஊற வைத்து கொள்ளுங்கள்.

ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் ஊற வைத்திருந்த பருப்பினை சேர்த்து அதனுடன் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள்.

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க தேனை இப்படி பயன்படுத்துங்க போதும்

கிளிசரினை கலக்கவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கிளிசரினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் E கேப்சூலை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 3 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது இதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இதனை தினமும் இரவு தடவி அடுத்த நாள் காலையில் நன்கு குளிர்ந்த தண்ணீரால் கழுவி கொள்ளுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெற ஆரம்பிப்பதை பார்க்கலாம்.

7 நாட்களில் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்க பால் மட்டும் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement