கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் மறைய செய்யலாம்..! ரொம்ப சிம்பிள் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

How To Remove Blackheads in 5 Minutes 

வணக்கம் பிரண்ட்ஸ்..! ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். அதிலும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். முக அழகிற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் முகத்தில் பருக்கள் வந்து அது நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. கரும்புள்ளிகள் எப்படி இயற்கையாக வருகிறதோ அதேபோல நாமும் அதை இயற்கையான முறையில் தான் சரிசெய்ய வேண்டும். அதனால் இன்று முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை இயற்கையான முறையில் மாயமாக மறைய செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How To Remove Blackheads in 5 Minutes in Tamil:

How To Remove Blackheads in 5 Minutes

  1. வேப்பிலை
  2. தயிர் – 1 ஸ்பூன்
  3. அரிசி மாவு – 1 ஸ்பூன்

வேப்பைலையில் இருக்கும் நன்மைகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். வேப்பிலை அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அற்புத மூலிகையாகும். இது கரும்புள்ளிகளை மறைத்து முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. தயிர் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. அரிசி மாவு வறண்ட சருமத்தை சரி செய்ய உதவுகிறது. அதனால் இந்த 3 பொருட்களையும் எடுத்து கொள்ளுங்கள்.

செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்

பேஸ் பேக் செய்முறை:

How To Remove Blackheads in 5 Minutes

முதலில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு வேப்பிலை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை சுத்தமாக கழுவி கொள்ளவும். மிக்சி ஜாரில் வேப்பிலை மற்றும் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

பின் அதை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதில் நாம் எடுத்து வைத்துள்ள அரிசிமாவை 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்.. அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்

பேஸ் பேக் அப்ளை செய்யும் முறை: 

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும். பின் முகத்தை ஈரப்பதம் இல்லாமல் துடைத்து கொள்ளவும்.

பிறகு நாம் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இது உங்கள் முகத்தில் குறைந்தது 20 லிருந்து 30 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய செய்யும்.

இவ்ளோ முடியா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.. அதற்கு இந்த 2 பொருளை எண்ணெயில் சேர்த்து தடவுங்க

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil