Puducherry News in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் தரப்படும். தமிழ்நாடு முழுக்க உள்ள ரேஷன் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும். இந்நிலையில் புதுச்சேரியில் பொங்கல் பரிசிசுக்கு பதிலாக 500 ரூபாய் ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! இந்திய ரயில்வேயின் சூப்பர் ஆப்.. இனி அனைத்தும் ஒரே ஆப்பில்..
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.500! நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்த முடிவு
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக வங்கி கணக்கிற்கு 500 ரூபாய் அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் பொங்கல் பணிடிக்கைக்கு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சை பருப்பு, கடலை பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு பொங்கல்தொகுப்பிற்கு பதிலாக பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 3,53,249 ரேஷன் கார்டுகளுக்கு தலா 500 ரூபாய் விகிதம் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் அங்குள்ள 1.30 லட்சம் சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச ஆடைகளுக்குப் பதிலாக, நேரடியாக வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்போது இந்த அறிவிப்பைப் புதுவை அரசு வெளியிட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2024 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |