அப்பளம் செய்வது எப்படி? – Homemade Appalam recipe in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் வீட்டிலேயே மிக எளிதாக அப்பளம் செய்யும் முறையை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக அப்பளம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக மற்றும் சாப்டாக இருக்கும். பல் இல்லாதவர்கள் சாப்பிடும் போது தொட்டுக்கொள்வதற்கு அப்பளத்தை தான் தேர்வு செய்வார்கள்.
அது போக சாம்பார், புளிக்குழம்பு, வத்தல் குழம்பு, ரசம், புளிசாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் இது போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்வதற்கும் இந்த அப்பளம் மிகவும் நன்றாக இருக்கும். அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த அப்பளத்தை மிக எளிதாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மொறு மொறு அப்பளம் செய்முறை
Ingredients
- உளுந்து - 250 கிராம்
- பேக்கிங் சோடா - ¾ ஸ்பூன்
- தூள் உப்பு - ஒரு ஸ்பூன்
- நல்லெண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- மைதா மாவு - சிறிதளவு
Instructions
அப்பளம் செய்முறை:
- 250 கிராம் வெள்ளை உளுந்தை மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு அதனுடன் ¾ ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் தூள் உப்பு சேர்த்து சல்லடையை பயன்படுத்தி நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளுங்கள். சலிக்கும் போது குறுநகையாக குடிக்கும் அத்தனையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு அரைத்த மாவை ஒரு பவுலில் மாற்றி அவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்துகொள்ளுங்கள்.
- மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்த பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் நல்லெணெய் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள்.
- மாவை நன்கு பிசைந்த பிறகு ஒரு 10 நிமிடம் நன்கு ஊறவைக்கவும். 10 நிமிடம் கழித்த பிறகு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். (குறிப்பு மாவு உங்களுக்கு கெட்டியா இருந்தால் மட்டும் தண்ணீர் சேர்த்து மீண்டும் பிசையவும், மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு தான் இருக்கிறது என்றால் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டாம்)
- இப்பொழுது ஒரு அகலமான பலகையில் சிறிதளவு மைதா மாவை தூவி அவற்றில் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நன்கு பிசைந்து எடுக்கவும். இப்பொழுது மீண்டும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும்.
- பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மூடிவைக்கவும். பிறகு அவற்றில் ஒரே ஒரு உருண்டையை எடுத்து அதனை சப்பாத்திக்கு மாவு தேய்ப்பது போல் நன்கு மெல்லிசாக தேய்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- தேய்த்த மாவினை ஒரு டிபன் பாக்ஸை பயன்படுத்தி அதனை சிறு சிறு வட்டமாக கட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- கட் செய்த பிறகு இருக்கும் மீதமுள்ள துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து அதனையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இது போல் மீதம் இருக்கும் மாவுகளை தேய்த்து சிறு சிறு வட்டங்களாக கட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். (குறிப்பு இந்த மாவை தேய்க்கும் போது மைதா மாவை தூவி விட்டு தான் தேய்க்க வேண்டும் வேறு எந்த மாவுகளை பயன்படுத்த கூடாது)
- அப்பளத்தை வட்டமா கட் செய்யும் போது நிறைய மாவுகள் மிஞ்சும் அதனை மீண்டும் தண்ணீர் செலுத்து பிசைந்து, சப்பாத்தி போல் தேய்த்து கட் செய்து எடுத்துக்கொள்ளலாம். ஆக அதனை தூக்கி எறிந்திட வேண்டாம்.
- இவ்வாறு தேய்த்த அப்பளத்தை வெயிலில் குறைந்தது 15 நிமிடங்கள் காயவைத்து எடுத்தால் போதும் மொறு மிரு மற்றும் சுவையான அப்பளம் தயார். கண்டிப்பாக ஒரு முறை இதனை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிக்கன் சூப் இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் செமையா இருக்கும்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |