முள்ளங்கி ரெசிபி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே காய்கறி என்றாலே வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். காய்கறியை நீங்கள் குழம்பிலும், வறுவல் போன்று செய்து கொடுத்தால் சாப்பிட தான் மாட்டார்கள். இதனை வித்தியாசகமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்.
அதாவது முருங்கை கீரையை வடையாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். அது போல் பீட்ரூட் பிடிக்காது என்று தான் சொல்வார்கள். இதனை நீங்கள் பக்கடாவாக போட்டு கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள். அந்த வகையில் முள்ளங்கியை எந்த மாதிரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முள்ளங்கி பன்னீர் கிரேவி செய்முறை
Ingredients
- முள்ளங்கி- 2
- உருளைக்கிழங்கு-1
- வெங்காயம்-1
- தக்காளி-1
- பட்டை.கிராம்பு, ஏலக்காய் சிறிதளவு
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள்- 1/2ஸ்பூன்
- அரிசி மாவு- 4 ஸ்பூன்
- கான்பிளவர் மாவு- 2
- பெருங்காய தூள்- சிறிதளவு
Instructions
முள்ளங்கி பன்னீர் ரெசிபி
முதலில் முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கு எடுத்து நைசாக சீவி கொள்ள வேண்டும். முள்ளங்கியில் நீர் சத்து இருப்பதால் பிழிந்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அரிசி மாவு 4 தேக்கரண்டி, கான்பிளவர் மாவு 2 தேக்கரண்டி, சிறிதளவு உப்பு, பெருங்காய தூள் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து தட்டு எடுத்து கொள்ள வேண்டும், எண்ணெய் சேர்த்து தட்டு முழுவதும் தடவி கொள்ள வேண்டும். அதன் பிறகு பிணைந்து வைத்துள்ள மாவை சேர்த்து சம அளவாக பரப்பி கொள்ள வேண்டும்.
இதனை இட்லி பானையில் சேர்ப்பதற்கு இட்டலி தட்டை தலை கீழாக கவுத்து வைத்து மேல் தட்டை வைத்து 10 நிமிடம் வேக விட வேண்டும்.
அதற்கிடையில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், வெங்காயம், தக்காளி போன்றவை சேர்த்து கதக் வேண்டும். இவை ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து 2 முந்திரி பருப்பு பேஸ்ட்டாக அரைக்க வேண்டும்.
அடுத்து கடாய் வைத்து அதில் எண்ணைய் ஊற்றி சோம்பு சிறிதளவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்துக்க வேண்டும்.
பின் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசால தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இட்டலி பானையில் வைத்த முள்ளங்கி வெந்திருக்கும். இதனை ஒரு தட்டில் சேர்த்து பீஸ் பீஷாக கட் செய்ய வேண்டும். இதனை ஒரு கடாயில் சேர்த்து இரண்டு பக்கமும் சிவந்த நிறம் வரும் வரைக்கும் வதக்க வேண்டும். சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதனை கொதிக்கின்ற மசாலாவில் சேர்த்து ஒரு நிமிடம் தீயை அதிகமாக கொதிக்க விட வேண்டும். அவ்வளவு தாங்க முள்ளங்கி பன்னீர் மசாலா ரெடி.!
2 நிமிடத்தில் சட்னி செய்யலாம்..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |