வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீரின் முக்கியத்துவம் பற்றிய கவிதை | Importance of Water in Tamil Katturai

Updated On: January 21, 2025 6:29 PM
Follow Us:
Importance of Water in Tamil Katturai
---Advertisement---
Advertisement

நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நீர் வளத்தின் முக்கியத்துவம் பற்றி கொடுத்துள்ளோம். நீர் எவ்வளவு இன்றியமையாது என்று நம் அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் நம்மில் பலபேர் தண்ணீரை வீணடித்து கொண்டு இருக்கிறோம். மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நிலம், நீர், காற்று. இவை மூன்றும் இன்றி உலகம் இயங்காது என்பது உண்மை.  நீரானது மனிதருக்கு மட்டுமல்லாமல் உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகவும் இன்றியமையாதது. நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது உண்மை. இப்போது உள்ள காலகட்டத்தில் நீருக்காக அடுத்த உலக போரே ஏற்படலாம் என்று பேசுபவரும் உண்டு. காரணம், தண்ணீரின் தேவை அதிகரிக்கும் போது அவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று உள்ளோம்.

மனிதன் தன் வாழ்வில் “நீர்” என்பதை மிக முக்கிய அடிப்படை தேவையாக கருதியே வாழ்கின்றான். நீரின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் கட்டாயத்தில் இன்றைய தலைமுறை உள்ளது. நீரின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை படிக்கலாம் வாங்க..

உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை:

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

பொருளடக்கம்:

முன்னுரை 
நீர்களின் பிறப்பிடமாக இருப்பது 
நீரின் முக்கியத்துவம் 
நீரை பாதுகாக்க வழிமுறைகள் 
முடிவுரை 

முன்னுரை:

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு மூல ஆதாரமாக இருப்பது தண்ணீர். மனிதன் உணவு இல்லாமல் கூட உயிர் வாழ முடியும், ஆனால் நீர் அருந்தாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனிதரின் வாழ்வில் நீரானது அவசியமாக இருக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பறவை, விலங்கின உயிரினங்களுக்கும் நீர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

நீர்களின் பிறப்பிடமாக இருப்பது:

நீரானது ஹைட்ரஜன் மற்றும் (H2O) மூலக்கூற்றினால் உருவானது. பூமியில் நீரானது 71 சதவிகிதமாகவும், 28 சதவீகிதம் நிலத்தாலும் உருவாகியுள்ளது. நீரின் சதவிகிதம் தான் அதிகமாக உள்ளது. சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரூற்றுக்கள், தரைக்கீழ் நீர், பனிக்கட்டி, வளிமண்டலம் போன்றவைகளில் தான் பெரும்பாலும் நீர் தேக்கம் செய்யப்படுகிறது.

நீரின் முக்கியத்துவம்:

திருவள்ளுவர் நீர் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்கிறார். நீரின் முக்கியத்துவம் அந்த அளவிற்கு அமைந்துள்ளது. நீரானது உடல் சூட்டை தனிப்பதற்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.

உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற உதவியாக இருப்பது நீர் தான். உமிழ்நீர் போன்ற சுரப்பிகள் சுரப்பதற்கும் நீர் மட்டுமே ஆதாரமாக விளங்குகிறது. நீர் மனித மற்றும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் விவசாய தொழிலுக்கு, தொழிற்சாலைகளுக்கு, உணவு உற்பத்தி போன்ற அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவமாக இருக்கிறது.

நீரை பாதுகாக்க வழிமுறைகள்:

நம் முன்னோர்கள் அனைவரும் நீரினை அத்தனை வழிமுறைகளோடு பாதுகாத்து வந்தார்கள். நீர் வீணாகிவிட கூடாது என்று குளங்கள், ஏரி போன்று அமைத்து நீர் தேக்கம் கட்டி நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். நீர் தேக்கங்களை அழிக்க விடாமல் இன்றைய சந்ததியினர் நாம்தான் அவற்றை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும்.

நீரை எடுக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளை மூட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். காடுகளை அழிப்பதை தவிர்த்துவிட்டு மரம் வளர்ப்பதை மேற்கொள்ள வேண்டும்.

முடிவுரை:

எல்லாவற்றிற்கும் நீர் முக்கியத்துவமாக இருப்பதால் நீரினை வீணடிக்காமல் பாதுகாப்பது நமது கடமையாகும். நீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதற்காக மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் நீர் இல்லையென்றால் உயிர் வாழ முடியாது என்று நினைத்தால் கண்டிப்பாக நீரினை பாதுகாப்போம்..!

இயற்கை வளம் கட்டுரை
மரம் வளர்ப்போம் கட்டுரை
மழைநீர் சேகரிப்பு கட்டுரை

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now