High Profit Business with Zero Investment in Tamil
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து சம்பாதிக்க என்ற ஆசை உள்ளது. அதனால் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழில் தொடங்க வேண்டும் என்று சிந்தனை செய்கிறார்கள். அதேபோல் பலர் தங்களுக்கு ஏற்ற சுயதொழில் ஆரம்பித்து சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள். அதேபோல் உங்களுக்கும் ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் குறைவான முதலீட்டில் அதிக லாபத்தை அளிக்க கூடிய ஒரு சுயதொழில் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம் அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
என்ன தொழில்:
இன்றைய காலகட்டத்தில் அனைத்திலும் இயற்கையான பொருட்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. அதனால் இயற்கை பொருட்களில் மிகவும் அருமையான ஒரு பொருள் என்றால் அது கருவேப்பிலை தான்.
அதாவது இதன் தேவையானது அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கும் இடங்களிலும், பல மருந்துகள் தயாரிக்கும் இடங்களிலும் மற்றும் மசாலா பொருட்கள் தயாரிக்கும் இடங்களிலும் அதிக அளவு உள்ளது.
அதனால் இதனை பொடியாக தயாரித்து விற்றால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தேவையான மூலப்பொருள் மற்றும் இடவசதி:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள கருவேப்பிலை தான். இந்த தொழில் செய்வதற்கு உங்களின் வீட்டில் சிறிய நல்ல தூய்மையான இடம் இருந்தாலே போதும்.
எந்தக்காலத்திலும் இந்த தொழிலுக்கான டிமாண்ட் குறையவே குறையாது தினமும் 4,000 வரை சம்பாதிக்கலாம்
தேவையான ஆவணங்கள்:
இந்த தொழில் உணவு சம்மந்தபட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும். மேலும் இந்த Curry Leaves Powder-ரை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கிவைத்துள்ள கருவேப்பிலையை உருவி நன்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு காயவைத்து அதனை மிக்சியில் போட்டு நன்கு பொடியாக செய்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை நன்கு சலித்து பேக்கிங் செய்துகொள்ளுங்கள்.
விற்பனை மற்றும் வருமானம்:
நாம் தயாரித்து வைத்துள்ள நாட்டு மருந்து கடைகள் மற்றும் பல கடைகளில் விற்பனை செய்யலாம். இதனை நீங்கள் தோராயமாக 1 கிலோ 400 – 500 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ கருவேப்பிலை பொடி விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4000 – 5000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.
இந்த தொழிலுக்கான முதலீடு என்று பாரத்தால் குறைவு தான் ஆனா லாபம் லட்சக்கணக்கில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |