அழகு கவிதை | அழகு கவிதை வரிகள் | Azhagu Quotes in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அழகு கவிதைகள் பற்றி பார்க்கலாம். அழகு என்பது நாம் பார்க்கும் விதத்தில் உள்ளது ஒரு நல்ல சிற்ப கலைஞருக்கு கல் அழகு, பூக்களை ரசிக்க தெரிந்தவர்களுக்கு இயற்கை அழகு, வானத்தை ரசிக்க தெரிந்தவர்களுக்கு நிலா அழகு, குழந்தைக்கு சிரிப்பு அழகு, மழைத்துளியை ஒன்றாய் சேர்த்து அருவியாய் நீர் ஊற்ற வைக்கும் பாறைகள் அழகு, அழகை வர்ணிக்க தெரிந்தவர்களுக்கு பெண்கள் அழகு, இப்படி அழகு எதில் தான் இல்லை அனைத்திலும் உள்ளது. அழகு அதை பார்ப்பவரிடமும், ரசிப்பவரிடமும் உள்ளது.
முக அழகு கவிதை:
அழகு என்ற வார்த்தை கூட கூடுதல் அழகாகிறது அந்த அழகை உன் முகத்தில் பார்க்கும் போது
புன்னகை அழகு கவிதை:
கரை தொடும் வானம் அழகு அதை விட என் மனதை தொடும் உன் புன்னகை அழகு
உன் அழகு கவிதை:
அழகுக்கு அழகு சேர்க்கும் வேலையை அடிக்கடி வந்து அற்புதமாய் செய்து விட்டு போகிறது உன் அனிச்சை நாணம்
என்னவளின் அழகு கவிதை:
உன் அழகு நதியின் கொள்ளிடம் என் கவிதை நதி
Alagu Quotes in Tamil – அழகு கவிதை:
அழகு என்பதன் அர்த்தம் தான் நிலவோ? இல்லை நிலவு என்பது தான் மருவி அழகு என்று பொருள் ஆனதோ?
பெண் அழகு கவிதை வரிகள்:
உன் கண்ணக்குழிக்கும், வெக்கத்திற்கும் தொடர்பு உண்டு! அதில் தொலைந்து போனவர்கள் ஆயிரம் உண்டு!
Azhagu Quotes in Tamil:
யாரும் அவளளவுக்கு அழகாகவும் இல்லை, அவளளவுக்கு, அளவாகவும் இல்லை!
Tamil Azhagu Kavithai:
காற்றுக்கு உருவம் இல்லை
என்று நினைத்து இருந்தேன்
இன்று இரண்டு கண்களில் கண்டேன்
என்னை கடந்து போன பூங்காற்றை
பூக்கள் பேசும் என்று
கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை
இன்று விழிகளை மறந்து
கண்டேன் பேசும் பூவை
வானவில்லை மேகத்தில்
பார்த்து இருக்கேன்
இன்று இமைகள் மூடாமல்
கண்டு ரசித்தேன் சுடிதாரில் வந்த வானவில்லை
அவள் கண்களில் கண்டேன்
கவிதைகள் கொஞ்சி பேசும் அழகை
அவள் இதழ்களில் கண்டேன்
ஆயிரம் மின்னல்கள் பூத்து குலுங்கும் அழகை
அவள் கூந்தலை தொட்டு விளையாடும்
அந்த தென்றல் காற்றின் அழகை கண்டேன்
பெண்கள் கவிதைகள் |
அம்மா கவிதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |