வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வேலுநாச்சியார் கவிதைகள் – Velu Nachiyar Quotes in Tamil

Updated On: March 4, 2025 5:27 PM
Follow Us:
Velu Nachiyar Quotes in Tamil
---Advertisement---
Advertisement

வேலுநாச்சியார் கவிதை – Velu Nachiyar Quotes in Tamil

இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். இந்த வீர தமிழச்சியை குறித்து சில கவிதைகளை இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

வேலுநாச்சியார் கவிதைகள்:

விதையாக பிறப்பின்
முளையிட்டு எழுவேன்..
பகையாக இருப்பின்
போர்க் கொண்டு வெல்வேன்..
என் தசையோடு கண்படின்
உன் உயிரதனை கொய்வேன்..
எட்டு திசையெங்கும்
மார்தட்டிச் சொல்வேன்..
நான் வீர தமிழச்சி டா!

சிதைவேனோ! வீழ்வேனோ!
எமன் வசைப் பாட,
எலும்புகள் எருவாக,
எழுந்தருள்வேன் தீ் பிழம்பாக
திரியிட்டு காத்திடுவாய்!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
சுயமரியாதை கவிதை

வேலுநாச்சியார் கவிதைகள்:Velu Nachiyar Quotes

வேலு நாச்சி அவ
வீர சாட்சி!
மறவர் பிறப்பு-அவள்
மறவாத இருப்பு!
வெள்ளையேன் கண்ணீல்-
விரல் விட்டு
ஆட்டியவர்களில்
அவ விரலும் ஒன்று!

Velu Nachiyar Quotes in Tamil:Velu Nachiyar Quotes

வடக்கே ஜான்சி
ராணிக்கு முன்னே
தெற்கே பேன்சி(பேமஸ்)
ராணியாய் ஆனவள்!
வீர தமிழச்சி
விவேகம் அவகட்சி!

நயவஞ்சகன் நவாப்மூலம்

வேலுநாச்சியார் கவிதை

நிர்கதியாய் ஆனவள்
நடுத்தெருவிற்கு வந்தவள் – பின்
அவன் குல நடுங்கச்
செய்தவள்…
நெற்குதிராய் நிமிர்தவள்!

Velu Nachiyar Quotes in Tamil:

சிவகங்கை சீமைக்கு
சீராய் புகுந்த மகிமை
கணவர் இறந்ததும்
போராய் எழுந்த பெருமை!
உடன்கட்டை ஏறாது
உடல் சுட்டே குறைக்காது
நெஞ்சுக்குழி ஈரம்
மறையாது
அவ ராணி ஆன வீரம்
மறக்காது!

கஷ்டங்களைக் கண்டு
கண்ணீர்த்துளிகளை
காலம் காலமாய்
காணிக்கை செலுத்தும் பெண்டிரே…

நீ செய்ய கடமைகள்
நிறையவுண்டு
கண்ணீர்த்துளிகளை
வியர்வைத்துளிகளாய் மாற்றி
சரித்திரம் படைக்க எழுந்து வா !

வேலுநாச்சியார் வரலாறு கட்டுரை

Velu Nachiyar Kavithai in Tamil:

Velu Nachiyar Kavithai in Tamil

வேலு நாச்சியார் போல்
சூளுரைத்து எழுந்து வா !
விடிவு உன்கையில் !

வீரமங்கை விளைஞ்ச நாடு
அம்மா என்று அழைத்த போது
அன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள்
சும்மா ஒருநாளும் இருந்தது இல்லை
சுமை தாங்கும் கல்லாய் இருப்பாள்
இம்மை பிறப்பை இயங்க வைப்பாள்
இன்னல் தாங்கி மேன்மை தருவாள்
தம்மை தரணியில் தாழ்த்திக் கொண்டு
பிறர் உயர ஏணியாய் இருப்பாள்

சிவகங்கை சீமையில் வேலு நாச்சியார்
சுதந்திர நாட்டிற்காக சிலிர்த்து எழுந்தாள்
சிவமுக்தி தல காசியில் ஜான்சி ராணியெனும்
மணிகர்னிகா பிறந்தாள் வீர மங்கையாக
தவப்புதல்வன் இறந்த பின்பு தத்துப்பிள்ளை
நாடாள வேண்டி ஆண் வேடமிட்டு
சவமாகும் வரை போரிட்ட வீரமங்கை
சவத்தை எரிக்கும் பெண் வைரமணி

வீரமங்கைகள் விளைஞ்ச நம் நாடு
வீறு நாட்டை போடும் நாடு
தீர மங்கை ஔவை கொண்டு
தீர்வு கண்ட நாடு நம்நாடு
சீரம் கொண்டு பாடுபடும் உழவனுக்கு
பக்க பலமாய் இருப்பவள் பெண்
நீரகம் சூழ்ந்த இப்புவியில் பெண்கள்
இல்லாமல் ஏது சக்தி இப்புவியில்

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now