Parotta Empty Salna Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் ரோட்டு கடை ஸ்டைலில் தக்காளி சால்னா செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த தக்காளி சால்னாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், அப்படி ஒரு சுவையில் இருக்கும்.
சரி வாங்க இந்த ரோட்டு கடை தக்காளி சால்னாவிற்கு என்னென்ன பொருட்களை சேர்க்கிறார்கள், எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
பரோட்டா குருமா செய்வது எப்படி?
Ingredients
- எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- பட்டை - மூன்று
- கல்பாசி - சிறிதளவு
- கிராம்பு - மூன்று
- பிரியாணி இல்லை - ஓன்று
- முந்திரி - ஐந்து
- புதினா - சிறிதளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- பெரிய வெங்காயம் - இரண்டு பொடிதாக நறுக்கியது
- தக்காளி - நான்கு பொடிதாக நறுக்கியது
- தேங்காய் - அரை மூடி
- போட்டு கடலை - இரண்டு ஸ்பூன்
- சோம்பு - ஒரு ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- இஞ்சி - ஒரு துண்டு
- மல்லி தூள் - 1¼ ஸ்பூன்
- மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
- பூண்டு - 10 பல் இடித்தது
- பச்சை மிளகாய் - ஓன்று
Instructions
பரோட்டா சால்னா செய்முறை:
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி பரோட்டா செய்ய மாவு பிசைய வேண்டாம்.. இந்த ட்ரிக்கை ட்ரை பண்ணுங்க
- முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் அரைமூடி தேங்காயை திருவி சேர்த்துக்கொள்ளுங்கள் பின் அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, ஐந்து முந்திரி, சிறிய பீஸ் கல்பாசி மற்றும் சிறிய பீஸ் இஞ்சி சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பல்ஸ் மூடில் அரைத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பின் அதனுடன் பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இல்லை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் புதினா இலை ஆகியவற்றை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு பொடிதாக நறுக்கிவைத்த வேங்கையாயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு பிடித்தாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- தக்காளி வதங்கிய பிறகு அதனுடன் தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
- பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு பல்ஸ் மூடில் அரைத்து வைத்திருக்கும் தேங்காயில் வதக்கி வைத்துள்ள இந்த வெங்காயம் தக்காளியை ஒரு கரண்டி மட்டும் எடுத்து தேங்காயுடன் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- இப்பொழுது வதக்கி கொண்டிருந்த தக்காளியில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
- பிறகு அரைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மீண்டும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிடுங்கள்.
- இறுதியாக இதனுடன் ஒரு பச்சை மிளகாயை அதனுடன் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கினால் சுவையான மற்றும் அருமையான பரோட்டா குருமா தயார். கண்டிப்பாக இந்த குருமாவை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
- இந்த குருமாவை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுகளுடன் தொட்டுக்கொள்ள மிகவும் நற்றாய் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஹோட்டல் சுவையில் பரோட்டா இனி வீட்டிலேயே செய்யலாம்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |