ரமலான் நோன்பு கட்டுரை | Ramadan Nombu Katturai in Tamil
நோன்பு என்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமையாக இருக்கிறது. நோன்பு விரதத்தை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே உணவு சாப்பிட்டு ஆரம்பிப்பார்கள். நோன்பானது மிகவும் புனிதம் மிக்கது பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது. சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கிவைக்கவல்லது. நாம் இந்த பதிவில் ரமலான் நோன்பு பற்றிய கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
ரம்ஜான் நோன்பு இருப்பது எப்படி? |
பொருளடக்கம்:
முன்னுரை |
நோன்பு என்பதற்கு பொருள் |
நோன்பு காலம் |
நோன்பினை எதற்காக இருக்க வேண்டும் |
நோன்பின் நன்மைகள் |
முடிவுரை |
முன்னுரை:
இஸ்லாமிய மதத்தில் நோன்பு என்பது ஒரு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. முகம்மது நபிக்கு முதன் முதலாக அல்குர்ஆன் வெளிப்படுத்திய மாதமாக ரமலான் மாதம் உள்ளது. அதனால் இஸ்லாமியர் மதத்தவர்களுக்கு ரமலான் மாதம் ஓர் ஆன்மீக ரீதீயில் ஒரு மகிமைமிக்க மாதமாக இருக்கிறது. விரதம் என்பது அனைத்து மதத்தவர்களுக்கும் ஒன்றுதான். இந்து மதத்தினர் பௌர்ணமி, அமாவாசை போன்ற விரதங்களையும், கிறித்தவர்கள் ஈஸ்டர் தினத்திற்கு முன் 40 நாட்கள் விரதத்தையும், முஸ்லீம் இனத்தவர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து விரதத்தை மேற்கொள்கிறார்கள்.
நோன்பு இருப்பதற்கு பொருள்:
நோன்பு எனும் வார்த்தை அரபு மொழியில் ஸவ்மு என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய பொருள் தடுத்து கொள்ளுதல் ஆகும். அதாவது சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து சூரியன் மறையக்கூடிய நேரம் வரையில் எந்த உணவையும் சாப்பிடாமல், தீய செயல்களில் ஈடுபடாமலும் உடல் உள ரீதியில் தம்மை கட்டுப்படுத்தி 30 நாட்களும் நோக்கும் விரதமே நோன்பு என பொருள் கொள்ளப்படுகின்றது.
ரமழான் என்ற வார்த்தையானது அரேபிய வார்த்தையான ரமிதா அல்லது அர் ரமத் என கூறப்படுகின்றது. தமிழில் சுடும் வெப்பம் அல்லது உலர்ந்த தன்மை என பொருள் கொள்ளப்படுகின்றது.
நோன்பு கால அட்டவணை 2024 |
நோன்பு காலம்:
அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் அவர்களால் அருளப்பட்ட மாதமாக இருக்கிறது இந்த 30 நாள் ரமலான் மாதம். இஸ்லாமிய வருடத்தில் உள்ள 12 மாதங்களில் ரமலான் 9-வது மாதமாக இருக்கிறது. நோன்பு விரதமானது 29 அல்லது 30 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திருநாளினை ஈகை திருநாள், ஈதுல் பிதிர் எனவும் அழைக்கப்படுகிறது.
நோன்பினை எதற்காக இருக்க வேண்டும்:
அன்னத்தை அடக்கியவன் ஐம்புலன்களையும் அடக்குவான் என்று கூறுவர்கள். இவைகளை கட்டுப்படுத்தும் போது நம் மனம் ஞானத்தைத் தேடிச் செல்கின்றது என்பதனை தத்துவ ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர். மேலும் பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்றும் சிலர் கருதுகிறார்கள். இறைவனை அடைவதற்கான வழியெனவும் சிலர் கருதுகின்றனர்.
நோன்பு கால அட்டவணை 2024 |
நோன்பின் நன்மைகள்:
நோன்பு விரதத்தை மேற்கொண்டால் மனதானது ஒரு கட்டுப்பாடு நிலைக்கு வந்து தீய செயல்களிலிருந்து நம்மை விலக்கி நல்வழியில் செலுத்துகிறது. நம்மில் இருக்கும் கோபத்தினை முற்றிலும் இந்த நோன்பு விரதம் குறைக்கிறது.
உடலில் பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, விரதம் மேற்கொள்வதால் அது சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளை நீக்கிவிடும். மேலும், உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், இரத்தத்தை தூய்மைப்படுத்தும்.
ஏனென்றால், உணவு சாப்பிடாத போது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே உடலானது சுத்தப்படுத்திக்கொள்கின்றன.
முடிவுரை:
நோன்பு காலத்தில் விரதத்தை கடைப்பிடித்தால் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்லலாம். நோன்பு காலத்தில் பொய் கூறுதல், மற்றவர்களை இழிவாக பேசுதல், வீண் பேச்சு பேசுதல், புறம் கூறுதல் போன்ற தகாத செயல்களில் ஈடுபடுதல் கூடாது. எனவே இஸ்லாமியரின் நோன்பு மகிமையை நாமும் தெரிந்துகொண்டு பிறருக்கும் உணர்த்த வேண்டும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |