How Cotton Candy is Made in Tamil
ஹலோ நண்பர்களே..! உங்களுக்கு பஞ்சு மிட்டாய் என்றால் பிடிக்குமா..? இப்படி எல்லாம் கேட்க கூடாது என்று சொல்வீர்கள். ஏனென்றால் யாருக்கு தான் பஞ்சு மிட்டாய் பிடிக்காமல் இருக்கும் சொல்லுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட ஆசைப்படுவார்கள். இவ்வளவு ஏன் 90s kids -ன் நீங்கா நினைவுகளில் இதுவும் ஓன்று. சரி அதை விடுங்க. இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். சரி நாம் கடற்கரைக்கு செல்லும் போதோ அல்லது ஏதாவது திருவிழாவிற்கு செல்லும் போதோ அங்கு பஞ்சு மிட்டாய் விற்பதை பார்த்திருப்போம். பார்த்த உடனே அதை வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனால் பஞ்சு மிட்டாய் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
பஞ்சு மிட்டாய் எப்படி உருவாகிறது..?
பொதுவாக நாம் வாங்கி சாப்பிடும் பஞ்சு மிட்டாய் பருத்தி மிட்டாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சு மிட்டாயை கண்டுபிடித்தவர் ஒரு பல் மருத்துவர் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா..?
ஆனால் அது தான் உண்மை. 1897 ஆம் ஆண்டில் வில்லியம் மோரிசன் டென்னசி மிட்டாய் தயாரிப்பாளர் ஜான் வார்டனுடன் இணைந்து இந்த கலவையை உருவாக்கினார். இருவரும் 1908 -இல் உலக கண்காட்சியில் பஞ்சு மிட்டாய்களை அறிமுகப்படுத்தினர். அப்போது இதன் விலை 25 காசுகள் மட்டுமே.
சரி பஞ்சு மிட்டாய் எப்படி உருவாகிறது என்று ஒரு கேள்வி இருக்கும். அதை பற்றி இங்கு காண்போம்.
மனிதர்களால் நீருக்குள் இருக்கும் போது ஏன் மூச்சு விட முடியவில்லை.. |
அதுபோல பஞ்சு மிட்டாய் இரண்டு பொருட்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஓன்று காற்று மற்றொன்று வண்ண சர்க்கரை.
முதலில் பஞ்சு மிட்டாய் இயந்திரத்தின் மையத்தில் சுவையான சர்க்கரை சேர்க்கப்படுகிறது. பின் சுழலும் மையம் 300 டிகிரி வரை வெப்பமடையத் தொடங்குகிறது மற்றும் சர்க்கரை உருகுகிறது. மையம் சுழலத் தொடங்கும் போது, உருகிய சர்க்கரை ஒரு திரையின் வழியாக தள்ளப்படுகிறது. இது பருத்தி மிட்டாய் போல மெல்லிய நூல்களாக மாறுகிறது.
பின் நமக்கு இது பஞ்சு மிட்டாயாக கிடைக்கிறது. அதுபோல இந்த பஞ்சு மிட்டாய்க்கு அதிக சுவையை தருவது எத்தில் மால்டோல் எனப்படும் செயற்கை சுவை தான். இது பஞ்சு மிட்டாய் சுவையில் முக்கிய மூலப்பொருள் ஆகும்.
அதுபோல பஞ்சு மிட்டாய் வெப்பமான பகுதியில் இருந்தாலோ அல்லது குளிர்ச்சியான பகுதியில் இருந்தாலோ அது விரைவாக உருகத் தொடங்குகிறது. இப்படி தான் பஞ்சு மிட்டாய் உருவாக்கப்படுகிறது.
ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |